India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு வேலைக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.
ஒசூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையை சேர்ந்த காளியப்பன்(62) என்கிற ஓட்டுநர் கண்டெய்னர் லாரியில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி வந்துள்ளார். பின்னால் வந்த கணரக லாரி மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளில் இடித்து சர்வீஸ் சாலையில் விழுந்தது. லாரியை மீட்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி தோப்பு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜு (66) ஜவுளி வியாபாரி. இவரும் இவரது மனைவி ராதாருக்குமணி 2 பேரும் துணி வியாபாரம் செய்ய காரில் சென்றனர். காரை கோவிந்தராஜு ஓட்டிச்சென்றார். அப்போது அஞ்செட்டி அடுத்த கத்திரிப்பள்ளம் வனப்பகுதி சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் கோவிந்தராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமை–யில் நடைபெறுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதியில் செப் 30-ந் தேதிக்குள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாலூர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நந்தகுமார்(22) என்பவர் தங்கை முறைக்கொண்ட 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி ஒசூர் அடுத்த கோவிந்த அக்ரகாரம் என்னும் கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நந்தகுமார் சிறுமியை கடத்தி சென்ற நிலையில் பெற்றோர் அளித்த புகாரில் நந்தகுமார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பணியாளர்கள் 26 நபர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள், மற்றும் 11 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் இயங்கும் சட்ட உதவி ஆலோசணை அமைப்பிற்கு” துணை மற்றும் உதவி சட்ட உதவி வழக்கறிஞர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். விருப்பமுள்ளவர்கள் https://krishnagiri.dcourts.gov.in/ நீதிமன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த உரிய ஆவணங்களுடன் 11.09.2024-ம் தேதி மாலை 05.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ (அ) நேரிலோ அனுப்பலாம் .
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்டைய பழங்குடி இருளர் இன மக்களுக்கு சிறப்பு PMJANMAN திட்டத்தின் மூலம் முகாம் நாளை முதல் செப் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒப்பதவாடி, காரகுப்பம், ஆலப்பட்டி, மத்தூர், உத்தனப்பள்ளி, சிங்காரபேட்டை, தளி, அனுமந்தபுரம், வேப்பனப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ள இம்முகாமை பழங்குடியின மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு நேற்று உயர்நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. விசாரணை அறிக்கையை செப் 4-க்குள் தாக்கல் செய்யவும், மேலும் சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகயை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனுடன் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பள்ளியை ஆய்வு செய்து மாணவிகள், பெற்றோர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.