Krishnagiri

News September 9, 2024

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நாளை முதல் 24.9.24 வரை நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் என தனித்தனியே நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 04343 291727, 7401703487.

News September 8, 2024

இடைநின்ற 8,823 பேரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் இளம்வயது திருமணங்களும், மாணவர்கள் இடைநின்றலும் அதிகமாக உள்ளன. இதை தடுக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கண்டறியப்பட்ட 8,823 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News September 8, 2024

ஓசூரில் நீதிமன்ற விநாயகர் வைத்து பூஜை

image

ஓசூர் ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் குழுவினர் நேற்று சென்னை ஐகோர்ட்டு போன்று விநாயகர் அரங்கு செட் அமைத்து கோர்ட்டில் நீதிபதியாகவும், மற்றும் வக்கீல்கள், போலீசார் என 14 விநாயகர்கள் நீதி பரிபாலனை செய்யும் வகையில் செட் அமைத்திருந்தனர். கோர்ட்டில் நீதிபதியாகவும், வழக்காடும் விநாயகர்கள், குற்றவாளி கூண்டில் எலி வாகனம், கோர்ட்டு வளாகத்தில் காந்தி சிலை, இருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

News September 7, 2024

கிருஷ்ணகிரி சபவத்தில் மேலும் ஒருவர் கைது

image

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிவராமனுக்கு உதவியதாக இருந்ததாக நாம் தமிழர் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்த முன்னாள் நிர்வாகி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிவராமன் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் கருவிகளை தீ வைத்து எரித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News September 7, 2024

தேன்கனிக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டம்

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தில் பாறை குன்றுகளில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்து தெரு நாய்கள் மற்றும் ஆடுகளை கடித்து குதறியது. அப்பகுதியை சேர்ந்த ரத்தினம்மாள் என்பவர் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆட்டை சிறுத்தை கடித்து தூக்கி சென்றது. இந்நிலையில் தாசில்தார் கோகுல்ராஜ் மற்றும் வனத்துறையினர் இஸ்லாம்பூர் பகுதியில் நேற்று ஆய்வு செய்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்தனர்.

News September 7, 2024

கிருஷ்ணகிரியில் 116 இடங்களில் தானியங்கி மின் நிறுத்த கருவி

image

யானைகளை மின்சாரம் தாக்குவதை தடுப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள 116 இடங்களில் வடிவமைக்கப்பட்ட தானியங்கி மின் நிறுத்த கருவியானது மின்வாரியம் சார்பில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் மின்சார ஒயர்களில் லேசான அதிர்வு ஏற்பட்டாலே, மின்சாரம் தானாக நின்று விடும் வகையில் இந்த கருவி–யின் செயல்பாடு அமைந்துள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமனுக்கு உதவிய அரசுப் பள்ளி NCC அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோபு என்பவர் மாவட்ட NCC ஒருங்கிணைப்பாளரும், ஆண்கள் பள்ளி NCC அலுவலருமாவார். போலி NCC முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிவராமன் உயிரிழந்த நிலையில், 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கோபு என்பவரும் கைதாகியுள்ளார்.

News September 6, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்க்க

image

தமிழக அரசின் சார்பாக மின்சாரத் துறையின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76,272 எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓர் இலவச மின் இணைப்பிற்கு, ஒரு வருடத்திற்கு ரூ.30,000 வீதம் தமிழக அரசு செலவிடுகிறது. ஆகையால் மாவட்டத்தில் உள்ள மின் இணைப்புகளை வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் மூலம் சரிபார்த்து அறிக்கை அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நவராத்திரி விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்ள அழைப்பு

image

அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை-34-இல் நடத்தப்படும் கண்காட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவில் நடைபெறும் நவராத்திரி விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் செப் 9 -க்குள் http://exhibition.mathibazaar.com/login இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

ஓசூர் ஆசிரியரிடம் ரூபாய் 6.30 லட்சம் மோசடி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சோர்ந்த ஆசிரியர் சபரிநாதன்(36) என்பவருக்கு போனில் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது. அதை உண்மை என நம்பி ரூ 6.30 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தினார். ஆனால், அவருக்கு எந்த பொருள்களும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன் கிருஷ்ணகிரி எஸ்.பி அலுவலக இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!