India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூரில் 13-வது புத்தகத் திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் கடந்தாண்டு ரூ.75 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.85 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் விற்பனையானதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் உலகின் முன்னணி பேட்டரி நிறுவனமான LOHUM ரூ.2000 கோடியில் இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலை மத்தூரில் அமைக்கயுள்ளது. இந்த தொழிற்சாலை 65 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த ஆலையில், 18 மாதங்களில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் செய்ய மாநில அரசு உறுதுணையாக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரி சச்சின் மகேஸ்வரி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஜூலை 26) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு வேலைவாய்ப்பு
முகாமில் பிரபல தனியார் நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய
உள்ளனர்.இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதற்கட்ட சேர்க்கை நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக ஜூலை 31ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காலத்தில் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.750 மற்றும் விலையில்லா பாடப்புத்தகம், வரைபடகருவி, சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, மூடுகாலணி (ஷூ) ஆகியவை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் ராயக்கோட்டை மேம்பாலம் எதிரே உள்ள விநாயகா ஹாலில் ஒருங்கிணைந்த மாவட்ட பொருப்பாளர் நெப்போலியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் திருமால்வளவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து பேசினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த 80 ஆண்டுகளாக ரயில் நிலையமே கிடையாது. சுற்றுவட்டாரத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கிரானைட் தொழிற்சாலை, கால்நடைச் சந்தை அதிக அளவில் உள்ளது. இவை அனைத்தையும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்ய, சாலைப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினால் குறைந்த செலவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும்.
கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளா்களை சந்தித்த
அதிமுக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்வுமான கே.பி.முனுசாமி மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திரம், பீகாருக்கு மட்டுமே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் பிரதமரும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் மத்திய நிதி அமைச்சருக்கு சாமானிய மக்களின் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை என்றும் சாடினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு முகவர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் வரும் 26ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நுகர்வோர்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
திமுக அரசு மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கழக துணை பொதுச்செயலாளர் முனுசாமி அவர்கள் துவக்கி வைத்து பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளர்
அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு 2023-24ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை தணிக்கை மேற்கொள்வதற்கு பட்டய கணக்காளர்களிடமிருந்து விருப்புரிமை கோரிக்கைகள் வரவேற்க்கபடுகின்றன. விண்ணப்ப படிவங்களின் மாதிரியை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.