India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கிருஷ்ணகிரியில் மட்டும் 33 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04343-236189)தொடர்பு கொள்ளவும். SHARE IT <<17001950>>தொடர்ச்சி<<>>
மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சாந்தி (12) அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து சாந்திக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியதால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய மோகன் (28), பசுபதி (31), ஜெயக்குமார் (30), தனிஷ் (22), கார்த்திகை (27), சக்திவேல் (29), திருப்பதி (27) ஆகிய 7 பேரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அஞ்செட்டி வனத்துறையினர் பூ மரத்துக்குழி பகுதியில் நேற்று (ஜூலை 7) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சித்தாண்டபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (27) மற்றும் பிலிகுண்டுவை சேர்ந்த ஜாக்சன் (37) ஆகிய இருவரை வனத்துறை விசாரித்ததில் அவர்கள் இருவரும் 8 கிலோ மான் கறியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான பணியாணை வழங்கி 56 நபர்களிடம், ரூ.22 லட்சம் மோசடி செய்த மனோ, சதீஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆணைகளுடன் ஓலாவுக்கு வேலைக்கு சென்றபோது, அந்தப் பணி ஆணையை நாங்கள் தரவில்லை என நிறுவனத்தில் கூற, இம்மோசடி அம்பலமானது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் 15.07.2025 முதல் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளனர்.
தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT
வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000429 (வாடகை அதிகாரியிடம்) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. தொடர்ச்சி
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள்<
கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.