Krishnagiri

News October 5, 2025

கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 5, 2025

கிருஷ்ணகிரியில் வீடு தேடி வரும்

image

தீபாவளியை முன்னிட்டு `தாயுமானவர்` திட்டத்தில் கீழ் அக் 5, 6-ல் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் இன்று மற்றும் நாளை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை ரேஷன் கடை அறிவிப்புப் பலகையில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 5, 2025

கிருஷ்ணகிரியில் சூழ்ந்த மழை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஜக்கப்பன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. மேலும்ஈ, மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

News October 5, 2025

கிருஷ்ணகிரி: நீங்க B.E-ஆ? இந்தியன் வங்கி வேலை

image

கிருஷ்ணகிரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். யாருக்காவது உதவும் இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க.

News October 5, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181 – எந்த அவசர சூழலிலும் பெண்கள் உடனடியாக தொடர்பு கொள்ளக்கூடிய எண் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு, மதிப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும் எனவும், ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாகவும், மதிப்பு மிக்கவராகவும், சக்தி வாய்ந்த வராகவும் உணரும் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

News October 5, 2025

முழு கொள்ளளவை நெருங்கும் கே.ஆர்.பி. அணை

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் இன்று (அக்.,4) 50 அடியை எட்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரநீர் வெளியேற்றப்படுகின்றது இதனால் கிருஷ்ணகிரி, பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், தளிஹள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

BREAKING: கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்திற்கு தடை

image

கிருஷ்ணகிரியில் நாளை (அக்.05) நடைபெற உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சாலைவலம் மற்றும் வேன் பிரசாரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளது. சாலை வலம், வேன் பரப்புரைக்கு போலீசார் மறுத்த நிலையில், வேறு இடத்தில் மேடை அமைத்து பரப்புரை செய்ய அனுமதி அளித்துள்ளது.

News October 4, 2025

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

கிருஷ்ணகிரி மக்களே சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இந்த இணையதளம்<<>> மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 4, 2025

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 8,875 பேருக்கு பணி

image

ரயில்வே துறையில் காலியாக உள்ள சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், இளநிலை கணக்கு உதவியாளர் கம் தட்டச்சர் & மூத்த எழுத்தர் கம் தட்டச்சர் பதவிக்கு 8,875 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News October 4, 2025

அஞ்செட்டி: இடி, மின்னலுடன் மழை.. மாடு பலி

image

அஞ்செட்டி வட்டம் நாட்றாம்பாளையம் பூந்தோட்டபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்து. இவர் நேற்று தனக்கு சொந்தமான பசு மாட்டை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மாலை, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பசு மாடு வயலிலேயே உயிரிழந்தது. மேலும், அப்பகுதியில் தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

error: Content is protected !!