India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT சர்வே குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04343239400) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க <<17015679>>தொடர்ச்சி<<>>
கிருஷ்ணகிரி “இந்தியாவின் மாம்பழத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3,00,000 டன்களுக்கும் அதிகமான மாம்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதும் இதன் தனிச் சிறப்பு. இந்த விழாவில் 6 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். ஷேர்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 09) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பர்த்தி பஞ்சாயத்து மோரன அள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காளிரத்தினத்திற்கு (ஜூலை 7) பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சார்பில் நேற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வரும், 21ல், அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியும், 22ல், கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலையும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகலும் நடக்கின்றன. அரசு உதவி பெறும், தனியார் பள்ளி கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் மொத்த ஆழம் 52 அடியாக உள்ள நிலையில், இன்று (ஜூலை 9) அதன் நீர்மட்டம் 50.95 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர்வரத்து வந்துள்ள உள்ள நிலையில், 204 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் சீராக இருப்பதால், இது விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கிருஷ்ணகிரியில் மட்டும் 33 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04343-236189)தொடர்பு கொள்ளவும். SHARE IT <<17001950>>தொடர்ச்சி<<>>
Sorry, no posts matched your criteria.