India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவேரிப்பட்டினம் சுண்டக்காய்பட்டி கிராமத்தில் கந்தர்மலை முருகன் கோவில் உள்ளது. இந்த மலையில் உள்ள குகையில் சூரிய ஒளி படாத வள்ளி குளம் உள்ளது. இந்த குளத்தின் நீரை பருகினால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. வள்ளிக்கு விக்கல் ஏற்பட்ட போது சூரிய ஒளி படாத குளத்தின் நீரை பருகினால் விக்கல் தீரும் என முருகன் கூற வள்ளி இங்கு வந்து நீரை பருகியதாக கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். மேலும் குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஓசூரில் குன்றின் மேல் அமைத்துள்ளது ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில். இங்கு பிரகாரத்தில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழை இல்லாத காலத்தில் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்துவார்கள்.தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் தொட்டியில் உள்ள தண்ணீர் வற்றாமல் இருந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் டேனியல்(29). பெங்களூரில் தனியார் கார் ஷேரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரண்டு இளம் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு வட்டு தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாக நிலையில், கேராளாவில் பதுங்கியிருந்த சந்தோஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன்கொட்டாய் சேர்ந்த இரண்டு குடும்பத்தினா் இன்று விடுமுறைக்காக ஒகேனக்கல் சென்றனர். அப்போது ஆலம்பாடி ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் போது பாக்கியலட்சுமி மற்றும் காவிய இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்று நீச்சல் தெரியாமல் உயிர் இழந்தனர். காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உதவியுடன் அரை மணிநேரம் போராடி ஆற்றில் இருந்து உடலை மிட்டனர்.
Sorry, no posts matched your criteria.