India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்காக, ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்தப் பத்திரம் மற்றும் ரூ.600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கடைகள், கல் அல்லது தார்சுக் கட்டடங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரண்டு மடங்கு லாபம் என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. நமது நம்பிக்கையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் மோசடி முயற்சிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மோசடிகளில் ஏமாந்திருந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, நாளை (செப்.14, ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தற்போது, அவரின் பயண விவரங்கள் வெளியாகி உள்ளன. காலை 9.30 மணியளவில், ஓசூர் விமான நிலையம் வந்தடைந்து, காலை 9.45 மணிக்கு, கிருஷ்ணகிரிக்கு புறப்படுகிறார். பின்னர், காலை 11 மணியளவில், கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் செப்டம்பர் 14 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனபள்ளி, பர்கூர் மற்றும் காவேரிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்கிறார். ‘கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும்’ என்ற புத்தகத்தையும் அவர் வெளியிடுகிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, CCTV கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குவதற்கான 13 நாள் இலவசப் பயிற்சியை வழங்குகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மேலும் தகவல்களுக்கு, 94422 47921, 90806 76557 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.ஷேர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய இன்று (செப்.13) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்யப்படும். இதில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க!
கிருஷ்ணகிரி பாரதியார் நகரைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் முகமது ரபிக் (48), தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், கடந்த செப்.11 அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.