India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் மகா-விஷ்ணு (31). இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகா-விஷ்ணு வீட்டிற்கு வரவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி, காவேரிபட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில், தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார் இன்று (நவ.14) குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, வட்டாட்சியர் ரமேஷ், குழந்தைகள் இல்ல காப்பாளர் கிருஷ்டோபர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

கிருஷ்ணகிரி நவம்பர் 14 இன்று இரவு ரோந்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம் காவல்துறை அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது. தனிப்பட்ட மொபைல் எண் அல்லது இலவச மொபைல் எண் 100,112 என்னில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, பாரண்டப்பள்ளி கிரிகேபள்ளி, சந்திராப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு, கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள M/s.SAPL Realty Corporation Limited என்ற நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட நிலம் மற்றும் அதில் உள்ள கட்டிடம் 26.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள் அவர்கள் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.