Karur

News April 26, 2025

விஷக் கதண்டு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு!

image

சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 25, 2025

கரூரில் ’மயோனைஸ்’ ஆய்வு தீவிரம்!

image

பதப்படுத்தப்படாத முட்டையிலிருந்து (பச்சை முட்டை) மயோனைஸ் தயாரிக்கப்பட்டு உண்பதால், இரைப்பை மற்றும் குடல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது‌. இதன்காரணமாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 08-04-2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் நாட்களில் கரூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணியில் ஈடுபட கரூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர். 

News April 25, 2025

கரூர்: இரிடியம் மோசடி செய்த 6 பேர் கைது !

image

கரூர் பசுபதிபாளையத்தில் ’சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல் இருடியம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குமரேசன், பொன்னரசன், ஹரிஷ், தியாகராஜன், சுரேஷ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம் கெமிக்கல்கள் கார் செல்போன்களை பறிமுதல் செய்து, இன்று(ஏப்.25) சிறையில் அடைத்தனர். 

News April 25, 2025

ஆரம்பமாகிறது தமிழக அரசின் இலவச பயிற்சி

image

தமிழக அரசின் விளையாட்டு துறை சார்பாக கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று 25.4.25 முதல் 15.5.25 வரை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு மட்டுமே கலந்து கொள்ள முடியும். கரூர் மாவட்ட கேலோ இந்தியா ஜூடோ பயிற்சியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

உதவி லோகோ பைலட்’ பணி; உடனே விண்ணப்பியுங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை <>rrbchennai.gov.in<<>> என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

News April 25, 2025

திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம் கரூர் வரை இயங்கும்

image

சேலம் கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

News April 25, 2025

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

image

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்

News April 24, 2025

கரூரில் பார்மசிஸ்ட் தேர்விற்கான இலவச பயிற்சி !

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் மருந்தாளுநர்(பார்மசிஸ்ட்) தேர்விற்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 25-04-2025 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 9499055912 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ  விண்ப்பிக்கலாம். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

News April 24, 2025

கரூரில் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு !

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஏப்.28ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் இன்று(ஏப்.24) தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

கரூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!