Karur

News November 7, 2024

கரூரில் இலவச அழகுகலைப் பயிற்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கப்பெறும். இப்பயிற்சியானது கரூரில் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 8072828762, 9025808570 எண்ணிற்கு அழைக்கலாம்.

News November 7, 2024

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை: தக்காளி ரூ.35,30 வெங்காயம் ரூ.75, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.70, கத்தரிக்காய் ரூ.40,35, பாகற்காய் ரூ.40, சுரக்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.35, பச்ச அவரை ரூ.100,80, பரங்கிக்காய் ரூ.15, மாங்காய் ரூ.50, புடலங்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.15, கருவேப்பிலை ரூ.60, புதினா ரூ.100, கொத்தமல்லி ரூ.75, ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

News November 7, 2024

கரூரில் குடும்ப அட்டைதாரருக்கு குறைதீர்நாள் கூட்டம்

image

கரூரில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 09-11-2024 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகையால் பொதுமக்கள் குடும்ப அட்டை சம்பந்தமாக புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.

News November 6, 2024

கரூரில் தாய் சேய் நல சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் சேய் நலனை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் தாய் சேய் நலம் உதவி மற்றும் கண்காணிப்பு மையம் மற்றும் உதவி கண்காணிப்பு மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் 9342238410, 9342216978, 9363209897, என்ற எண்களில் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 6, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக இத்துறையின் வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். என கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல்,இ.ஆ.ப., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

கரூர்: அறக்கட்டளைகளுக்கு லைசன்ஸ் புதுப்பிக்கலாம்

image

கரூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இத்தகைய இல்லங்களுக்கு லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டும் இல்லை என்றால் சீல் வைக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 6, 2024

கரூரில் தொழில் முனைவோருக்கு கலைஞர் கடன் திட்டம்

image

கரூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு தாட்கோ மூலம் கலைஞர் கடன் திட்டம் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கரூர் மற்றும் கிளை மேலாளர், தாட்கோ வங்கி (போன் 04324 262636, 89258 14613, 86675 47964 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.

News November 6, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <><>ஆன்லைனில்<<>> <<>>விண்ணப்பிக்கலாம். கரூரில் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க.

News November 6, 2024

கரூரில் தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant-Intermediate), ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கிறது. மேலும் தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யவும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 6, 2024

கரூரில் கூடைப்பந்து போட்டி நாளை தொடக்கம்

image

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் இணைந்து திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் மற்றும் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிகளில் நடக்கிறது என மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!