Karur

News August 14, 2025

கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் உடனே வேலை..APPLY NOW

image

கரூர் மக்களே, Hindustan Petroleum Corporation Limited காலியாக உள்ள FTPA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் வரும் செப்.14 தேதி வரை, இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 14, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.8.202 அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 14, 2025

மக்களே உஷார்..கரூரில் இன்று மின் தடை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள ▶️உப்பிடமங்கலம், ▶️எஸ். வெள்ளாளப்பட்டி, ▶️ஒத்தக்கடை, ▶️பாலம்மாள்புரம், ▶️தாளப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 14) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 14, 2025

தொழில் பயிற்சி நிலையத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

image

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. தற்பொழுது கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News August 13, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் நாளை (14.08.25) திருமா நிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மருத்துவ காப்பீடு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய. ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

கரூர்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

கரூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<> இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். கரூர் மக்களே, வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 13, 2025

கரூரில் ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

image

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 13, 2025

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில், இன்று (13.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் உள்ளனர்.

News August 13, 2025

கரூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இலவச திறன் பயிற்சி!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கரூர் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து மெர்ச்சன்டைசர் குவாலிட்டி கன்ட்ரோல், மற்றும் இன்ஸ்பெக்சன் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், போன்ற பயிற்சிகள் 100 சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் புகளூர் பகுதியில் பயிற்சி நடத்தப்பட இருகின்றன. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 9489736687 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

News August 13, 2025

கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

error: Content is protected !!