Karur

News December 7, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

கரூர் மாவட்டத்தில் வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கும், இறைச்சிக் கூடங்களில் கால்நடைகளை வதை செய்வதற்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தங்கவேல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம், கரூர் மற்றும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தொடர்பான கூட்டத்தில் கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News December 7, 2024

கரூரில் முருங்கை விலை உயர்வு

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதிகளில் விளைவிக்கப்படும் முருங்கை காய்கள் கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் முருங்கை வரத்து குறைந்துள்ளது. இதனால் 1 கிலோ முருங்கை ரூ.180 முதல் ரூ.200 வரை விலை அதிகரித்து விற்பனையானது.

News December 7, 2024

கரூரில் பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பெருக்கி

image

தமிழக அரசு போக்குவரத்து சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டு, ஏ.சி, டிக்கெட் மெஷின் என பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்தது. இந்நிலையில், கரூர் பேருந்துகளில் தற்போது ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News December 7, 2024

கரூர் மாவட்ட ஆட்சியரின் நாளைய திட்ட விவரம்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் பங்கேற்க உள்ள நாளை (07.12.2024) நிகழ்ச்சிகள், காலை 10.00மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டுபிடிக்கும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, மாலை 4.00 மணி அளவில் முன்னாள் படை வீரர், நலன் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் தம் குடும்பத்தை சார்ந்தோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

News December 6, 2024

கரூரில் முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

image

கரூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க (www.mudhalvarmarundhagam.tn.gov.in) என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்திருந்தார். 05/12/2024 விண்ணப்பிக்க கடைசி நாட்களாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி 10/12/2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 6, 2024

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கரூரில் 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கான தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 6, 2024

கரூர் உழவர் சந்தை காய்கறிகள் விலை நிலவரம்

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்: தக்காளி ரூ.50, கத்தரி ரூ.50, வெங்காயம் ரூ.75, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.60, பாகற்காய் ரூ.50, சுரக்காய் ரூ.25, வெண்டைக்காய் ரூ.50, பச்சை அவரை ரூ.100-80, பரங்கிக்காய் ரூ.15, மாங்காய் ரூ.60, புடலங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.55, பூசணிக்காய் ரூ.15, புதினா ரூ.80, கொத்தமல்லி ரூ.60, கருவேப்பிலை ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News December 6, 2024

கரூர் கலெக்டர் எச்சரிக்கை

image

கரூர் மாவட்ட கலெக்ட்ர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பெண்குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News December 5, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
2.காந்திகிராமத்தில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
3.உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு
4.கல்லூரி மேலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
5.விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

News December 5, 2024

உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இன்று (05.12.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளிடம் நேரடியாகவே உணவின் தரத்தின் குறித்து உண்மை தன்மைகளை கேட்டறிந்தார்.

error: Content is protected !!