Karur

News November 1, 2025

கரூரில் இலவச மருத்துவ முகாம்!

image

கரூர் வெண்ணைமலை நாளந்தா அறக்கட்டளையும் கரூர் அரசன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (நவ.2) நாளை, கரூர் சர்ச் கார்னர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. ஹென்றி லிட்டில் நினைவு ஆலய வளாகத்தில் நடைபெறும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். மேலும் முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல் மற்றும் செல்பேசி எண்ணுடன் வரவேண்டும்.

News November 1, 2025

கரூர்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 1, 2025

கரூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News November 1, 2025

கரூர்: Google Pay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 1, 2025

கரூர்: இன்று 11 மணிக்கு..! மக்களே ரெடியா

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று நவ.1-ம் தேதி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கிராம மக்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் தெரிவிக்கலாம். (SHARE)

News November 1, 2025

கரூர்: வாகனம் மோதி விபத்து!

image

பில்லாபாளையம் அடுத்த சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்த சஞ்சீவிராமன்(35). இவர் நேற்று தனது பைக்கில் வீரக்குமாரன்பட்டி சாலையில் தனது தோட்டத்திற்கு சென்றபோது எதிரே மகுடீஸ்வரன் ஒட்டி வந்த தோஸ்த் வாகனம் மோதியதில் சஞ்சீவிராமன் வலது கால் தொடையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அவரது தந்தை புருஷோத்தமன் புகாரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

News November 1, 2025

கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கரூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் உள்ள எக்விடாஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை முகாம் நாளை இன்று நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய வேண்டுமென கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News October 31, 2025

கரூர்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

image

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 31, 2025

கரூர்: இன்றே கடைசி நாள்!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (31.10.2025) கடைசி நாள் ஆகும். இந்த தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 31, 2025

கரூர்: குடும்ப தகராறால் விபரீத முடிவு

image

கரூர் மாவட்டம் K. பரமத்தி அருகே, குவாரியில் மெக்கானிக்காக பணியாற்றும் மணிகண்டன் என்பவர், நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இந்த விஷயம் அறிந்து மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!