Karur

News November 2, 2025

வாங்கல் அருகே வசமாக சிக்கிய பெண்!

image

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே கோயம்பள்ளி பகுதியில், ட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, வாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேரில் சென்ற வாங்கல் போலீசார் அங்கு மதுவிற்பனையில் ஈடுபட்ட சுதா என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2025

கரூர் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

கரூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 2, 2025

கரூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நவ.1 முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்

News November 2, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூரில் வாழை, மரவள்ளி, மிளகாய், தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் சேர, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு புகைப்படம், ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு கட்டணத்துடன் பிரீமிய தொகையாக தக்காளிக்கு, ரூ.3,908, வெங்காயத்திற்கு ரூ.2,240, மரவள்ளி, ரூ.4,903, இ-சேவை மையங்களில் செலுத்தி காப்பீடு செய்ய கரூர் மாவட்டஆட்சியர் அழைப்பு

News November 2, 2025

கரூர் அருகே வெடித்த நில பிரச்சனை!

image

கரூர்: கடவூர், ஒந்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி (60). இவரிடம் நிலப் பிரச்சனை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சக்தி மற்றும் பொன்னன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மகாமுனி, இது குறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்துறையினர்,சக்தி மற்றும் பொன்னன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 2, 2025

கரூர்: பெட்டிக்கடையில் மது விற்ற நபர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரமேஷ் (37). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மது விற்ற ரமேஷ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டிகளும் பறிமுதல் செய்தனர்.

News November 1, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வரும் ரேஷன் பொருட்கள்

image

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 1, 2025

கரூர் சம்பவம்- அஜித் ஓபன் டாக்!

image

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம் அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும்இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் என்றார்.

error: Content is protected !!