India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்கல்பட்டியை சேர்ந்தவர் நாகேஸ்வரன் மகன் தினேஷ்குமார் (25). இவர் பெட்டவாய்த்தலையில் உள்ள சாந்தி மளிகை கடையில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கும் வராமல் இருந்து வந்தவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் உள்ள பாத்ரூமில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மத்திய அரசின் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (Prime Minister Micro Food Processing Enterprise Development Scheme) கீழ், விவசாயிகள் தங்கள் வணிகத்திற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம். நீங்கள் தொழில் செய்ய விருப்பம் இருந்து பணம் இல்லை என நினைத்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தின் நிபந்தனை என்னவென்றால், விவசாயம் தொடர்பான தொழிலை செய்ய வேண்டும்.
கரூர் தோரணங்கல்பட்டி சாலைப் புதூரில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன் (31) என்பவர், வீட்டிற்குக் கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் நடந்ததை டவுன் போலீசில் தெரிவித்தார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நாளை மூடி வைக்க வேண்டும் என கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை மீறி மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ரூ.1,25,200 முதல் ரூ.2,54,800 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு இந்த <
கரூர் உழவர் சந்தையில் இன்றைய (பிப்.10) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.20, கத்தரி ரூ.30, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.35, பச்சை அவரை ரூ.80, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.65, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் கடந்த 6 இரவு கொசுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயசந்திரன் உடையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த ஜெயசந்திரன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். வெள்ளியணை போலீஸ் விசாரிக்கின்றனர்.
“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த <
கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர்லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
கரூர் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை 10ம் தேதி முதல், 17 வரை நடக்கிறது. இதில், 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39,236 பேருக்கும், 20-30 வயதுடைய, 80,627 பெண்கள் (கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.