India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முப்பெருந்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு சட்டப் பேரவை உரையினையும் தமிழ்த்தாய் வாழ்த்தினையும் அவமதிப்பு செய்ததாக தமிழக ஆளுநரைக் கண்டித்து, இன்று காலை 10 மணியளவில் தலைமை தபால் நிலையம் முன்பாக கரூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா & காவிரி இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டிகளில் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் நூலக வாசகர்களுக்கு இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற 49வது தேசிய அளவிலான போட்டியில் கரூரைச் சேர்ந்த மாணவி மோனிகா தமிழ்நாடுஅணிக்காக கலந்து கொண்டு விளையாடினார். இந்தபோட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கம் வென்ற அணியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய மாணவி மோனிகாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்தினார்.
கரூர் சேகருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சின்ன நாயக்கன்பட்டி பிரிவு அருகே டிசம்பர் 4ம் தேதி வந்தபோது கரூர் வெங்ககல்பட்டி ராஜா மற்றும் சிலர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரை மிரட்டி பணம் பறித்தனர். வெள்ளியணை காவல் நிலையத்தில் ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் சில வழக்குகள் இவர் மீது உள்ளதால் நேற்று இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 11,612 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 11,352 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 200 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 150 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 150 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியதாகக் கூறி ஆளுநரைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாகக் கூறி அதிமுக, பாஜகவை கண்டித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, கரூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில், திமுக சார்பில் இன்று காலை 9.30 மணி அளவில், கரூர் தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் 2025 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (06/01/2025) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
”தமிழக சட்டமன்ற நிகழ்ச்சியின் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவடையும் போது தேசியகீதமும் பாடப்படும் என்றுகூட தெரியாத ஆளுநருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரையைப் படிக்காமல் ஓடிப்போவது ஆளுநருக்கு தான் அவமானம். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இழப்பு எதுவுமில்லை” என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 20 வயது பெண். திருச்சி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (58) என்பவர் வேலாயுதம்பாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள கோழிப் பண்ணைக்கும் பரவியது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 200க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.
Sorry, no posts matched your criteria.