Karur

News January 9, 2025

கரூரில் மகள் கல்யாணம்: கொண்டு வந்த பணம் போச்சே!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பன் (65). இவர் தனது மகளின் திருமணத்திற்காக கூட்டுறவு சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தையும், தோகைமலையில் ஐஓபி வங்கியில் நகைகளின் அடகு வைத்த பணம் என மொத்தம் ரூ.1,95,000 பணத்தை மஞ்சள் பையில் தோகைமலை பஸ் ஸ்டாண்டில் வைத்திருந்த போது யாரோ திருடிச் சென்றுவிட்டனர். புகாரின்பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News January 9, 2025

மாயனூர் கதவணைக்கு 10076 கன அடி நீர்வரத்து

image

மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 10076 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 9426 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 200 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 350 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 100 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2025

மணல் கடத்திய லாரியை கட்சி நிர்வாகி போலீசில் ஒப்படைப்பு

image

கரூர் சணப்பிரட்டி ரயில் நிலையம் அருகே கடந்த 15 நாட்களுக்கு மேலாக சவுடு மண், மணல் கடத்தப்பட்டு வரும் லாரிகளை நேற்று (ஜன.8) மடக்கிப் பிடிக்கும் போராட்டம் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அதன்படி அவ்வழியே மணல் கடத்தி வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி லாரியை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

News January 9, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்: ஆட்சியர் பங்கேற்பு 

image

கரூர் மாவட்டத்தில் நாளை (09.01.2025) காலை 10.00 மணி அளவில், கரூர் மாநகராட்சி ஆட்சி மங்கலம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளார். இதில் வட்ட அலுவலர் அவர்களும் அரசு அதிகாரியும் கலந்து கொள்ள உள்ளனர் .

News January 8, 2025

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையதளம் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அதன் விவரங்களை நிகழ்ச்சிக்கு முன்னர், www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

கரூரில் விளையாட்டு போட்டிகள் ஆட்சியர் அழைப்பு

image

கரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்குபெறும் வகையில் 8 பிரிவுகளில் கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது அதில் சிறந்த படைப்பைப் படைத்த படைப்பாளிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பாராட்டி, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கவுள்ளார். மேலும்
(tndiprmhpongal2025@gmail.com) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 8, 2025

நீர்நிலை விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழலையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஆதாரமாக நீர்நிலை உள்ளது. நீர் நிலையைப் பாதுகாக்கும் எண்ணம் விதைத்திட “நீர்நிலைக்காவலர்” விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் awards.tn.gov.in என்ற web மூலம் விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்!

image

கரூரில் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 03.01.2025 மற்றும் 10.01.2025 நியாயவிலைக் கடைகள் செயல்படும். இப்பணி குறித்த புகார்கள் ஏதுமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 7, 2025

திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

கரூரில் மாவட்டத்தில் தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறிய திருநங்கைகளுக்கான 2024-2025க்கான திருநங்கைகள் விருது வரும் ஏப்.15 அன்று வழங்கப்படும். தகுதி வாய்ந்த திருநங்கைகள் 10.02.25க்குள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு கரூர் சமூகநல அலுவலகம் (04324 255009) எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

கரூரின் தங்க மங்கையை வாழ்த்திய செந்தில்பாலாஜி

image

ஹைதராபாத்தில் நடைபெற்ற 49வது தேசிய அளவிலான போட்டியில் கரூரைச் சேர்ந்த மாணவி மோனிகா தமிழ்நாடுஅணிக்காக கலந்து கொண்டு விளையாடினார். இந்தபோட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கம் வென்ற அணியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய மாணவி மோனிகாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்தினார்.

error: Content is protected !!