Karur

News February 15, 2025

கரூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

கருர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (15.02.25) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பின்வரும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:
1) தாளப்பட்டி துணை மின் நிலையம்
2) ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையம்
3) தென்னிலை ராஜபுரம் துணை மின் நிலையம்
4) தாந்தோன்றிமலை துணை மின் நிலையம்
ஷேர் பண்ணுங்க!

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும்.<<>> ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

விண்ணப்பிக்க கரூர் கலெக்டர் அழைப்பு

image

ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவை வழங்க மினிபஸ் இயக்க விரிவான திட்டம் வெளியிட்டப்பட்டுள்ளது. தடாகோவில் பைபாஸ் – ஈசநத்தம், கரடிபட்டி – அருங்கரை அம்மன் கல்லூரி, ஈசநத்தம்-வேலஞ்செட்டியூர், பள்ளபட்டி – குரும்பபட்டி உள்ளிட்ட கரூர், புலியூர், புகலூர், மண்மங்கலம் என 29 வழித்தடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News February 14, 2025

கரூர்: புதிய அரசு கலைக்கல்லூரி: முதலமைச்சர் திறப்பு

image

உயர்கல்வித்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தரகம்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை இன்று (14.02.2025) காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கின்றனர்.

News February 13, 2025

பெண்கள், குழந்தை, முதியோருக்கு உதவும் வரப்பிரசாதம்: சகி சேவை

image

குழந்தை,பெண்கள், முதியோருக்கு உதவ அவர்கள் துயரம் களைய சகி சேவை மையம் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் நிர்பயா நிதியில் இது செயல்படுகிறது. பெண்களின் குடும்ப பிரச்சினை,கட்டாய திருமணம்,குழந்தை திருமணம், பாலியல்தொல்லை, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லை பிரச்சனைக்கு தீர்வு காண இம்மையத்தை அணுகலாம். 6 ஆண்டுகளில் 1888 பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது. 9150057308

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கரூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

image

ஜல்லி, Mசேண்ட் களை கிரசரிலிருந்து ஏற்றுச் செல்லும் பொழுது கிரசர் நிறுவனங்கள் ட்ரான்சிஸ்ட் பாஸ் வழங்குவதில்லை. இதனால் அதிகாரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்கின்றனர். இதனை கண்டித்து பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். இதே போல் கரூர் மாவட்டத்திலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

News February 13, 2025

பைக் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

image

மணல்மேடு புத்தாம்பூர் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (49). இவரது மகன் யோக பாரதி(15). இருவரும் நேற்று காலை கரூர் திண்டுக்கல் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர் .டெக்ஸ் பார்க் அருகே சென்ற பொழுது மணல்மேடு பகுதியை சேர்ந்த சபரி (21) ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 12, 2025

கரூரில் அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வு

image

கரூர் மாவட்டத்தில்நாளை (13.02.2025)காலை 10.00 மணி அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி பெறும் நாகம்பள்ளி, வேலம்பாடி, இளங்கனூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மூன்று தொகுதி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள கலந்துகொள்ள உள்ளனர். 

News February 12, 2025

கரூரில் போதை புகார்கள் குறித்து புதிய செயலி அறிமுகம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகார்களை பதிவு செய்ய மொபைல் செயலி (Mobile App) DRUG FREE TN” பதிவிறக்கம் செய்வது தொடர்பாக, செயல் விளக்க கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!