India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகள் வடிவுக்கரசி 17. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த வடிவுகரசி காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் வசந்தா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை.
சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதப்படுத்தப்படாத முட்டையிலிருந்து (பச்சை முட்டை) மயோனைஸ் தயாரிக்கப்பட்டு உண்பதால், இரைப்பை மற்றும் குடல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 08-04-2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் நாட்களில் கரூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணியில் ஈடுபட கரூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கரூர் பசுபதிபாளையத்தில் ’சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல் இருடியம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குமரேசன், பொன்னரசன், ஹரிஷ், தியாகராஜன், சுரேஷ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம் கெமிக்கல்கள் கார் செல்போன்களை பறிமுதல் செய்து, இன்று(ஏப்.25) சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசின் விளையாட்டு துறை சார்பாக கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று 25.4.25 முதல் 15.5.25 வரை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு மட்டுமே கலந்து கொள்ள முடியும். கரூர் மாவட்ட கேலோ இந்தியா ஜூடோ பயிற்சியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை <
சேலம் கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் மருந்தாளுநர்(பார்மசிஸ்ட்) தேர்விற்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 25-04-2025 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 9499055912 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ விண்ப்பிக்கலாம். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.