India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (65). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கரூர் மண்மங்கலம் குமாரசாமி கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 24 மணி நேரமும் கண்காணிக்க, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள “ஸ்ட்ராங் ரூம்” என்னும் அறைக்கு சென்று, முறையாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறதா என ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (26). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் தினேஷ் என்பவருடன் காணியாளம்பட்டி சாலையில் அதிவேகமாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை ஏ சி டி நகர் பகுதியில் வசித்து வந்தவர் போத்துராஜ், மனைவி கமலா தேவி (81). இவர் உடல்நிலை சரியில்லாமல் மயக்கம் ஏற்பட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கமலாதேவி மகன் விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

குளித்தலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

கரூர் தோரணக்கல்பட்டி நேரு நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் மிதுன்(17), அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கே.எம்.புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் குளித்தபோது, இரும்பு குழாயில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்

கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழடை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, மனைவி இளஞ்சியம். இவர்களின் 14 வயது பேரன் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபக் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் ரெக்காவர் முன்னிலையில் தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கரூர், பால்வார்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி, மனைவி கஸ்தூரி(65). இவர் ஆட்டையாம்பரப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, ஆண்டாங்கோவில் செட்டிபாளையம் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் (26) எனபவர் கஸ்தூரி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரில் நேற்று தான்தோன்றி மலை போலீஸார் முத்துக்குமாரை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதன்படி 12 மணி நிலவரப்படி மொத்தமாக 78.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.