India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதில் கரூர் மாவட்டத்தில், 45 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, 4,741 மாணவர்களும், 5,470 மாணவியரும் என மொத்தம், 10211 பேர் தனித்தேர்வர்களாக, 52 பேர் என, 10,263 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வுக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து தேர்வு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புன்னம்சத்திரம் பகுதியில் 5 கல்லூரி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பாட்டில் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு மோகன்ராஜ் தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் ஆனந்த், அஜீத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தியாகு, ரவி, ராகுல் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
கரூர், குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்றது கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்.இங்கு பெண்கள் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்ள இத்தல இறைவன் அதை உடனே நிறைவேற்றி கொடுப்பார் என்பது நம்பிக்கை.இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.
கரூர் மாவட்டம் சித்தலவாய் ரயில் நிலையம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்த கிடந்ததாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் அவர் கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (50) இயற்கை உபாதை கழிக்க வந்த போது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கரூர் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை
கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடியில் விளைந்த நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வியாபாரிகள், இடைத்தரகர்கள் நடமாட்டம் இருந்தால், 1800 5993 540 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே<
கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா துக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66. இவர் கடந்த 22 ஆம் தேதி தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பியபோது திடீரென பைக்கில் தீப்பிடித்ததில் பழனிச்சாமி மீது 45% தீப்பிடித்து கொடுமுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், (60).விவசாயி. இவர், 60க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில், வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப, பட்டிக்கு சென்றார். அப்போது, வெறி நாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்ததில், 15 ஆடுகள் உயிரிழந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும், வெறிநாய்கள் கடித்து காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபிக்க <
கரூர் மாநகரில் வக்ப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒ.செயலாளர் மகாமுனி, மேற்கு மா.பொருளாளர் சதீஷ் , மேட்டுப்பட்டி தனபால், தர்மராஜ், அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் ரிபாய்தீன், ஒன்றிய செயலாளர் ஷேக் பரீத், சண்முகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.