Karur

News October 12, 2025

கரூர்: ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சின்னம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்த ரம்யா (47) என்பவரின் கணவர் பாலசுப்பிரமணி (53) உடல் நலக்குறைவால் ரயில்வே கேட் அருகே மயங்கி விழுந்தார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 12, 2025

கரூர்: பிரசவத்திற்கு பிறகு தாய் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் பூவாய்பட்டி சேர்ந்த மகாமுனியின் மனைவி கோகிலா (28) கர்ப்பமாக இருந்த நிலையில் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பிரசவவலியால் தோகைமலை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்ற பிறகு, அதிக ரத்தப்போக்கால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகாமுனியின் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News October 11, 2025

கரூர்: காவல்துறை சார்பில் உதவி எண் வெளியீடு

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.

News October 11, 2025

கரூர்: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

image

கரூர் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் (அக்.18). இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 11, 2025

கரூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News October 11, 2025

கரூர்: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு (16.10.2025) கடைசி நாள் ஆகும். (SHARE IT)

News October 11, 2025

கரூர்: பெண்களே பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

கரூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 11, 2025

கரூரில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி!

image

கரூர் மக்களே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்தில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. நல்ல வாய்ப்பு.., இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 11, 2025

கரூரில் ஊராட்சி செயலாளர் வேலை!

image

கரூர் மக்களே.., நமது மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.9. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 11, 2025

கரூர்: சாலை விபத்தில் சிக்கிய பெண்!

image

கரூர்: வெண்ணமலை எம்.ஜி.ஆர் சிலை அருகே, சுமதி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதே வழியில் விஜயகுமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுமதி மீது மோதியதில், சுமதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!