Karur

News May 7, 2024

கரூர் கடம்பவனேசுவரர் கோயில் சிறப்பு

image

கரூர் குளித்தலையில் உள்ள 65 ஆவது தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் கடம்பவனேசுவரர் கோயில் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 2ஆவது தலமான இதில் மூலவராக கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை உள்ளனர். புராணகாலத்தில் இவ்விடத்திற்கு குழித்தண்டலை என்ற பெயரும் உண்டு. இங்கு கடம்ப வனம் அதிகமிருந்ததாகவும் கூறுகின்றனர். இங்குள்ள முருகனுக்கு அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

News May 7, 2024

தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

image

கடவூர் தாலுகா சின்னமநாயக்கன்பட்டி களம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (14). இவர் வாழ்வார்மங்கலம் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயப்பிரியா காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. ஜெயப்பிரியா தாயார் இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 7, 2024

கார் கதவில் பைக் மோதி படுகாயம்

image

கரூர் வெங்கமேடு அரசி நகர் அருகே திட்ட சாலையைச் சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் சின்னகுளத்து பாளையம் டீக்கடை அருகே காரை நிறுத்தி இருந்துள்ளார். அப்போது திடீரென காரின் கதவை தங்கராஜ் திறந்த போது அவ்வழியே பைக்கில் வந்த சிவபிரகாஷ் கதவில் மோதி படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

News May 7, 2024

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கரூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

2 பைக்குகள் மோதியதில் படுகாயம்

image

குளித்தலை திம்மாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (24). இவர் தனது பைக்கில் குறப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தோஷ் குமார் மனைவி மரகதவல்லி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 6, 2024

41 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

கரூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் 104 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9086 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 41 பள்ளிகள் 100% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதில் 08 அரசு பள்ளிகளும், 03 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும் என கரூர் மாவட்ட கல்வி நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.31% லிருந்து 95.90% ஆக உயர்ந்துள்ளது.

News May 6, 2024

கரூரில் மழைக்கு வாய்ப்பு

image

கரூர் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

கரூர் மழைப்பொழிவு விவரம்

image

கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று (மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, மாயனூர் பகுதியில் 3 சென்டி மீட்டரும், தேக்கடியில் 2 சென்டி மீட்டரும், கடவூரில் 2 சென்டி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 1 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

கரூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் கரூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 6, 2024

12 ஆம் இடம் பிடித்த கரூர் மாவட்டம்

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கரூர் மாவட்டத்தில் 95.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் கரூர் மாவட்டம் 12 ஆம் இடம் பிடித்துள்ளது என கரூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

error: Content is protected !!