India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் காவல்துறையில் 25 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 05 காவல் அலுவலர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அதி ‘உத்கிரிஸ் சேவாக்’ பதக்கமும் மற்றும் 20 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 04 காவல் அலுவலர்களுக்கு ‘உத்கிரிஸ் சேவாக்’ பதக்கத்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா IPS அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கரூர் மாவட்ட ஆயுதப்படையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இன்று கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு நேரில் பார்வையிட்டார். அப்போது காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, கரூர் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.02.2025) காலை 10.00 மணி அளவில் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை காணொளி காட்சி வழியாக திறந்து வைக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அண்மை காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ
,அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் 14417 என்ற எண்ணில் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முன்னூர் கிராமம் கிரசர்மேடு பகுதியில் நேற்று போர்வெல் வேலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலட்சியமாக போர்வெல் லிப்டை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே போர்வெல் லாரி ஓட்டுநர் சதீஷ் 38 , லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் 48 ஆகிய இருவரும் உயிரிழந்தனர். க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர், அமைப்பு என 100 பேருக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கி தலா ஒரு லட்சம் வீதம் பணமுடிப்பு வழங்க உள்ளது. முன்மாதிரியான பங்களிப்பு அளித்த அமைப்பு, பள்ளி, கல்லூரி, தனிநபர், தொழிற்சாலைக்கு விருது வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு www.tnpcb.gov.in. கரூர் கலெக்டர் தகவல்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே நாமக்கல் பகுதி சேர்ந்த ரமேஷ் என்பவர் கரூர் டு திருச்சி சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காரை ஓரமாக நிறுத்திய அவர் அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி புகார் கொடுத்ததன் அடிப்படையில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விக்கான தேசிய மையம் சார்பில் பிப்ரவரி 28ஆம் தேதி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அடகு கடை தொழில் தொடர்பான தங்கம் மற்றும் வெள்ளியின் தரம் பார்க்கும் 5 நாட்கள் பயிற்சி துவங்க உள்ளது. எனவே இந்த வாய்பை பயன்படுத்தி தொழில் துவங்கவும் & வேலை வாய்ப்பு பெறவும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும் முன்பதிவு செய்ய இந்த நம்பருக்கு 98849 68920 / 87544 83083 தொடர்பு கொள்ளலாம்
Sorry, no posts matched your criteria.