Karur

News March 10, 2025

தமிழக அரசின் பொது சுகாதார துறை ஆய்வகத்தில் வேலை

image

தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள 126 ஆய்வக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்,வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் 21 ஆயிரம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 10, 2025

கோடை காலத்திற்கு முன்பே கரூரை பதம் பார்த்த வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை காண முடிகிறது. இந்த நிலையில்,நேற்று கரூரில் இன்றும் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

News March 9, 2025

அரவக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்து

image

அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை ரங்கமலை கணவாய் அருகே திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சேர்ந்த குடும்பம் வெள்ளகோவில் நாட்ராயன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டயர் வெடித்ததில் கார் இடதுபுறம் இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க் அறிவிப்பு பலகையில் மோதி கீழே உருளாமல் நின்றது. இதனால் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை.

News March 9, 2025

பணிக்கம்பட்டி பெயிண்டர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (50). பெயிண்டரான இவர் கடந்த 7ம் தேதி கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டி சந்தையில் 10அடி உயர சுவற்றில் தனியார் ஜவுளிக்கடை விளம்பரம் பெயிண்ட் செய்த போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பெரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 9, 2025

அருள்மிகு கல்யாண வெங்கடரமணர் திருக்கோயில்

image

கரூர் மாவட்டம் தான் தோன்றிமலையில் அமைந்துள்ளது ‘தென் திருப்பதி’ என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கடரமணர் திருக்கோயில்.இக்கோயிலில் பெருமாள் பாறையில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு மனம் உருக வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம், திருமன பாக்கியம் மற்றும் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது நம்பிக்கை. இதை ஷேர் செய்யுங்கள்.

News March 9, 2025

கரூரில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் முதல்வர் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கரூர், ஈரோடு, காஞ்சி, சிவகங்கை, தேனி, நாகை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும் என்றார். இது கரூர் பெண்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றுள்ளது. ( Share பண்ணுங்க)

News March 8, 2025

புகழ் நிறைந்த புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

image

கரூர்,வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய திருக்கோயில்.இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இங்கு வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 8, 2025

ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

கரூரில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க.

News March 8, 2025

கரூரில் ஆந்திரா தம்பதியினர் உட்பட 3 பேர் கைது

image

கரூர் க.பரமத்தியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர் நேற்று முன்தினம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 பணத்தினை பறித்து சென்றனர். விசாரணை மேற்கொண்டு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனுபடி சாய் தேஜா (27), கம்மா சங்கரம்மா (25), பாலாஜி (19), ஆகிய மூன்று பேரை க.பரமத்தி போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 8, 2025

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 3 பேர் மீது வழக்கு

image

கரூர், கடவூர் தாலுக்கா தேவர்மலை ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தப்பட்டி மாரியம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு இளையராஜா, சதீஷ் குமார், அஸ்வின் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!