Karur

News May 19, 2024

கரூர் அருகே விபத்து: பலர் காயம்

image

மே 18ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில், தண்ணீர் பந்தல் பிரிவு அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சசிகுமார், மகிழன், அனீஸ், ரிதுன்  ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில், க.பரமத்தி காவல்துறையினர் காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 19, 2024

தென்கொரியா நபருக்கு தமிழ் முறைப்படி திருமணம்

image

கரூர் அடுத்த கோம்பு பாளையம் பெருமாள் கோவிலில், நடையனூர் பகுதியைச் சார்ந்த விஜயலட்சுமி, தென் கொரியா நாடு டோங்யோங் சார்ந்த, மின்ஜுன்கிம் என்ற நபரும், ஆன்லைன் மூலமாக ஒரு வருட காலம் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தைக் காண அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நபரை பார்த்து சென்றனர்.

News May 19, 2024

புகளூர்: சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது

image

புகளூர் அடுத்த புன்னம் சத்திரம் அருகே மேலப்பாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குச் சென்று சோதனையிட்ட போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலப்பாளையம் ரமேஷ் (45), குமார் (52), சசிகுமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 4 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

News May 18, 2024

கரூர் அருகே ஆண் சடலம் மீட்பு

image

புகலூர் அடுத்து தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் கிராம அலுவலர் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த அலுவலர் மணிகண்டன், அடையாளம் தெரியாத ஆண் உடல் இருப்பதை உறுதி செய்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரித்து வருகின்றனர்.

News May 18, 2024

கரூரில் காலி குடங்களுடன் சாலை மறியல்

image

இன்று கரூர் வெங்கமேடு 4-வது வார்டு பகுதியில் பராமரிப்பு பணிக்காக சாலைகள் பறித்து போட்டு பல நாட்கள் ஆகியும் பணி மேற்கொள்ளாமல் உள்ளதை கண்டித்தும் சாக்கடை வசதி இல்லாதது மற்றும் குடிநீர் 20 நாளைக்கு ஒருமுறை மட்டுமே வருவதாக கூறி கரூர் சேலம் சாலையில் மரக்கிளைகளை வெட்டி போட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

News May 17, 2024

கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

News May 17, 2024

கரூர்: மழைக்கு வாய்ப்பு!

image

கரூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கரூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

காகிதக்கூழ் பிரிவில் இலவச தொழிற்கல்வி பட்டய படிப்பு

image

தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு காகிதக்கூழ் பட்டயப்படிப்பு இலவசமாக வழங்கபடுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள், விண்ணப்பப் படிவங்களை கரூர் புகழூர், திருச்சி மொண்டிப்பட்டி ஆலைகளின் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 10-க்குள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

News May 17, 2024

கரூர்: 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

கரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று(மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 17, 2024

கரூர்: டெங்கு விழிப்புணர் நிகழ்ச்சி

image

புகழூர் நகராட்சி அலுவலகம் முன் வாங்கல் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பொறியாளர் மலர்கொடி முன்னிலை வகித்தார். வாங்கல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் வரவேற்றார். ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பொன்ராஜ் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு விளக்க உரையாற்றினார்.

error: Content is protected !!