India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

கரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ரூ.1.57 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கோழி வளா்க்கும் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறு பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி விண்ணப்பிக்காலம் என தெரிவித்துள்ளாா்.

கரூர் மாவட்டம் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வேண்டி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவரது மனுவை நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜோதிமணி, கரூர் மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி ஆணையர் கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முகமது பைசல், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர். இன்றைய கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, குடும்பத்தை கோருதல் ,மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம் 657 மனுக்கள் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.