Karur

News March 12, 2025

வேண்டுதல்களை நிறைவேற்றும் கரூர் மாரியம்மன்

image

அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வம் கரூர் மாரியம்மன்.இங்கு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகத்துடன் சற்றே ஈசான்ய பார்வையில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இங்கு வழிபட்டால் அம்மை, உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணமற் போன பொருள்கள், வியாபார சிக்கல் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 12, 2025

விவசாயிகளுக்கு ரூ. 1,080 கோடி பயிர்க் கடன்; ஆட்சியர் தகவல்

image

மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு பயிர் கடன்களை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் இதுவரை 2,644 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1,28,853 விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்

image

‘தென் திருப்பதி’ என அழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி மாசி மகத்தேர் மற்றும் தெப்ப திருவிழா கடந்த 2ந்தேதி தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக கோயிலின் முன்பு தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனையடுத்து வருகிற 14-ந்தேதி தெப்ப தேர் திருவிழா நடக்கிறது. இதை ஷேர் செய்யுங்கள்.

News March 11, 2025

தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கீழபஞ்சபூரைச் சேர்ந்தவர் சரண் (20). இவர் தனது நண்பர் அபர்நாத் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு குளித்தலை அருகே மருதூர் பிரிவு சாலையில் வந்துள்ளார். அப்போது எதிரே தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சரண் பலியானார். அபர்நாத் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 11, 2025

குளித்தலையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

image

இன்று குளித்தலை நகராட்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு வழங்கினார். உடன் நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜன் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News March 11, 2025

கரூர்: மாதம் ரூ.5,000 உதவித்தொகை

image

கரூர், இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை ஷேர் செய்யவும்.

News March 11, 2025

கரூரில் மார்ச் 15ல் தனியார் வேலை வாய்ப்பு

image

கரூர் கலெக்டர் அறிவிப்பு: தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மார்ச்.15ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். கரூர் இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிடாதீர்கள். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2025

இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா 22. திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம் குள்ளப்பட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத போது அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி போலீசார் உடலை கைப்பற்றி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 10, 2025

ஆசிரியர் வீட்டில் இருந்த 27 பவுன் தங்க  அபேஸ்

image

கரூர், குளித்தலை அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் அன்பழகி 51. இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார். கடந்த 5ம் தேதி அன்று வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது சூட்கேசில் வைத்திருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News March 10, 2025

கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்!

image

கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவியை, மர்ம நபர்கள் ஆம்னி வேன் மூலம் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈசநத்தம் பகுதியை சேர்ந்த மாணவி, தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது காரில் கடத்தப்பட்டுள்ளார். சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதல் விவகாரத்தில் மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!