Karur

News February 24, 2025

கன்று வீச்சு நோய் தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கன்று வீச்சு நோய் தடுப்பூசி ஏற்கனவே கன்றுகளுக்கு 4 கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 5 ஆம் கட்டமாக வரும் 20 பிப்ரவரி முதல் 19 மார்ச் வரை கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. இத்தடுப்பூசி 4-8 மாத வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டுமே போடப்பட வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு.

News February 24, 2025

தவறான தகவலை பரப்பாதீங்க

image

கரூரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என கரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மாணவி, அம்மாணவனை பற்றி இழிவாக பேசியதால் கோவத்தில் மாணவன் கத்தியால் தாக்கியுள்ளார். மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கரூரில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

சிறுமி திருமணம் மூன்று பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

image

புதுச்சேரி மாநிலம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் கடந்தாண்டு ஜூலை, 5ல் கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த, 17 வயது எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். தாந்தோணி மலை யூனியன் சமூக அலுவலர் பூங்கொடி அளித்த புகாரின் பேரில் கரூர் மகளிர் போலீசார் 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News February 24, 2025

தன்வி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

image

கரூர் மக்களே, வரும் 25 பிப்ரவரி 2025 செவ்வாய்கிழமை தன்வி மருத்துவமனையின் “இலவச மருத்துவ முகாம்” காலை 9 முதல் 12மணி வரை நடைபெறுகிறது. இதில் ரத்த சோகைக்கான ரத்த பரிசோதனை, ஆசனவாய் குழாய் பரிசோதனை, மூலம், பௌத்திரம், குடலிறக்கம் ஒட்டு குடல் பித்தப்பை கற்கள் வயிறு மற்றும் குடல் புண், ஆகியவைக்கு பரிசோதனை செய்ய முன்பதிவு செய்து ஆலோசனை பெற, தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 90472 46825 என தெரிவித்துள்ளனர்

News February 23, 2025

3 பேரை அறிவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 

image

குளித்தலை அருகே இனுங்கூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரின் சித்தப்பா பரமசிவத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 30 வருடங்களாக நிலப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்துள்ளது. இது சம்பந்தமாக நேற்று ரமேஷ், பரமசிவம் மற்றும் ரமேஷின் அத்தை பழனியம்மாள் ஆகிய 3 பேரையும் முத்துப்பாண்டி அறிவாளால் தாக்கியுள்ளார். இது குறித்து நங்கவரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

News February 23, 2025

47 ஆயிரம் சம்பளம்: கடலோர காவல் படையில் வேலை

image

இந்தியக் கடலோர காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10 மற்றும் +2 முடித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளமாக 21 ஆயிரம் முதல் 47,600 வரை வழங்கப்படும் . விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News February 23, 2025

முதுகு வலியால் தூக்கு மாட்டி ஒருவர் மரணம்

image

கரூர், காந்திகிராமம் எழில் நகர் பகுதியில் வசித்து வந்த சசிகுமார் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்து மாத்திரை உட்கொண்டு வருகிறார். நேற்று வலி தாங்க முடியாமல் அவர் வீட்டிலேயே தூக்கு மாட்டி மாண்டு போனார். இது குறித்து அவரது மனைவி புகார் கொடுத்ததன் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 23, 2025

365 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணிகளை ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த பரமத்தி வேலூர் பாப்பன தோட்டத்தை சேர்ந்த ராமசாமியை சோதனை புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குந்தாணி பாளையத்தில் உள்ள ராமசாமி வீட்டின் காரில் 365 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், ராமசாமியையும் வேலாயுதம் போலீசார் கைது செய்தனர்.

News February 22, 2025

Junior Attendant வேலை ரூ.1 லட்சம் வரை சம்பளம்

image

IOCL ஆனது Junior Attendant உள்ளிட்ட 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். விணப்பிக்க இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!