Karur

News February 27, 2025

கரூர் போக்சோ வழக்கில் புரோட்டா மாஸ்டர் கைது

image

திருச்சி மாவட்டம், கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி டேனியல் ராஜ், 29. இவர், கரூரில் வஞ்சியம்மன் கோவில் தெருவில் தங்கி, புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, பிப்24 இரவு இவர் அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியின் வீட்டில் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.

News February 27, 2025

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

image

கரூர் மாவட்டத்தில், 167 பள்ளிகளில் உள்ள மையங்களில், 14 ஆயிரத்து, 167 மாணவர், மாணவியர் செய்முறை தேர்வு, பத்தாம் வகுப்புக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வு துவங்கி வரும், 28ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இதில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அடிப்படையில் காலை, மதியம் என இரு நேரமும் செய்முறை தேர்வு நடக்கிறது. மேலும் 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப். 15 வரையும் பொதுத்தேர்வு நடக்கிறது.

News February 27, 2025

தொழிற்பேட்டையில் வணிக மனைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அரவக்குறிச்சி அருகில், புஞ்சை காளக்குறிச்சி தொழிற்பேட்டையில் வணிக மனைகள் மற்றும் தொழில் மனைகள் வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே மொபைல் எண் 9445006553 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்

News February 26, 2025

புதிய நாடக மேடை திறந்து வைத்த எம்எல்ஏ

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் பில்லாபாளையம் ஊராட்சி காந்தி நகர் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடக மேடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News February 25, 2025

89 ஆயிரம் வீடுகளுக்கு சில்வர் பாத்திரம் வழங்கல்

image

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கோவிலில் இன்று வழிபட்டார். பிறகு அப்பகுதியில் உள்ள 89 ஆயிரம் வீடுகளுக்கு நேரில் சென்று சில்வர் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் துணைமேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், கவுன்சிலர் பழனிச்சாமி, ஒன்றிய பொறுப்பாளர் வேலுசாமி, முருகேசன் உடன் இருந்தனர்.

News February 25, 2025

ரயில்வே தேர்வுக்கு தேதி மீண்டும் நீட்டிப்பு

image

கரூரில் ரயில்வே தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.25 என நீட்டிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு என கருவூரார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாடமியில் தங்கும் விடுதி வசதி உள்ளது. மேலும் தகவலுக்கு 9514146000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவே மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News February 25, 2025

நாகனூரில்  நகை மற்றும் பணம் திருட்டு

image

தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சியில் உள்ள காலனியை சேர்ந்தவர் முருகேசன் (45) டெக்ஸ் கூலித் தொழிலாளி கரூர் டெக்ஸ்டைல்ஸ்க்கு வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து பார்த்தபோது. பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை மற்றும் ரூ 45 ஆயிரம் ரொக்க பணமும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து முருகேசன் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2025

கரூர் இன்றைய மின்தடை அறிவிப்பு

image

கரூரில் இன்று (25-02-2025) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி. அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு.

News February 25, 2025

“பேண்ட்” கேட்டு அண்ணியை தாக்கிய கொழுந்தனார் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் மனைவி குயின் 32. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டிலிருந்த போது அங்கு வந்த இவரின் கொழுந்தனார் ஜெய்வர்மன் தனது பேண்ட் வீட்டில் இருப்பதை எடுத்து தர கேட்டுள்ளார். அதற்கு இங்கு இல்லை என கூறிய குயினை திட்டி கையைப் பிடித்து முறுக்கி தலைமுடியை பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். லாலாபேட்டை போலீசார் இன்று வழக்குப்பதிவு.

News February 24, 2025

கன்று வீச்சு நோய் தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கன்று வீச்சு நோய் தடுப்பூசி ஏற்கனவே கன்றுகளுக்கு 4 கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 5 ஆம் கட்டமாக வரும் 20 பிப்ரவரி முதல் 19 மார்ச் வரை கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. இத்தடுப்பூசி 4-8 மாத வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டுமே போடப்பட வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு.

error: Content is protected !!