Karur

News October 15, 2025

BREAKING: கரூர் சம்பவம்: பேரவையில் CM விளக்கம்!

image

கரூர் துயர சம்பவம் குறித்து இன்று (அக்.15) சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. 41 உயிர்களைப் பலி கொண்ட இத்துயர சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

News October 15, 2025

கரூர்: டூவீலர் மெக்கானிக் நெஞ்சு வலி காரணமாக பலி

image

கரூர் அருகே வாழ்வார்மங்கலம் பகுதியில் ராஜலிங்கம் (35) என்பவர் தனது டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென நெஞ்சுவலியின் காரணமாக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 15, 2025

கரூர் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

image

கரூர் மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி மண்மங்கலம், கரூர், குளித்தலை, புகலூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த 17 வட்டாட்சியர்கள் பணியிடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று வெளியிட்டுள்ளார்.

News October 15, 2025

கரூர்: POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

கரூரில் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் வேண்டுமா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News October 15, 2025

கரூரில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு கரூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க

News October 15, 2025

கரூர் கலெக்டர் எச்சரிக்கை

image

வேதி உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் போது மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாய பயிர்களின் வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியம் மேலும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என என கரூர் கலெக்டர் அறிவுறித்தியுள்ளார்.

News October 15, 2025

துயர சம்பவம்; மீண்டும் கரூர் செல்லும் விஜய்?

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 15, 2025

கரூர் மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி

image

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மூன்று மாத கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்குகிறது. விருப்பமுள்ளோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 22.10.2025-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

News October 14, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (24.10.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!