Karur

News March 13, 2025

ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் பெரியார் வளைவு மேம்பாலம் பகுதியில் இன்று மதியம் 12:30 மணி அளவில் ஆம்னி கார், மீது பின்புறம் வந்த மற்றொரு கார் வேகமாக மோதி அருகில் உள்ள தடுப்புச் சுவரில் உரசி சென்று நின்றது. இந்த விபத்தில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

கூட்டுறவு சங்கங்களின் குறைகளை தீர்வு கூட்டம்

image

கரூர் மண்டலத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைகளைத்தீர்க்கும் பணியாளர்நாள் கூட்டம் 14.03.2025 அன்று 3.00 மணியளவில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் முல்லை கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை

image

கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருளலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தமிழக அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

News March 13, 2025

கரூரில் இரு நாட்கள் பறவை கணக்கெடுப்பு பணி

image

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில், கடந்த வாரம் ஈரநிலம் கணக்கெடுப்பு முடிந்த நிலையில் வரும், 15, 16 தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவை கணக்கெடுப்பு பணி மீண்டும் நடக்கிறது. இதில் பறவை, உயிரியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்‌ மேலும் விபரங்களுக்கு, வனச்சரக அலுவலர்கள் முரளிதரன் எண், 91767 68768, கனகராஜ் எண், 97885 78344 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

News March 13, 2025

நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

கரூரில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம்.நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி (அ)அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு <>https://eservices.tn.gov.in/ <<>>இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

News March 13, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் “A” திரவம் முகாம்

image

வைட்டமின் “A” குறைப்பாட்டினால் கண்பார்வை இழப்பு, வளர்ச்சி குறைபாடு, ஏற்படும். இதனை தடுக்கும் விதமாக 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கரூரில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.

News March 13, 2025

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12.03.25) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 12 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News March 12, 2025

கரூரில் குதிரை ரேக்ளா போட்டி

image

கரூர் மாவட்டம் அரசு காலனியில் அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட MGR இளைஞர் அணி சார்பில், வருகின்ற 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் 14-ம் ஆண்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடைபெறுகிறது. அதுசமயம் போட்டில் கலந்து கொள்வார்கள் கட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

கரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தாந்தோணி மலை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ பனி நாடுனர்கள் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு எம்.பி செ.ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.

News March 12, 2025

குளிர்பதன கிடங்கு வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

image

கரூர் ராயனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 25 மெட்ரிக் டன் குளிர்பதனக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் பழங்கள், காய்கறிகள், உலர் பொருட்கள் போன்ற வேளாண் விளை பொருட்களை வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!