India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழடை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, மனைவி இளஞ்சியம். இவர்களின் 14 வயது பேரன் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபக் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் ரெக்காவர் முன்னிலையில் தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கரூர், பால்வார்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி, மனைவி கஸ்தூரி(65). இவர் ஆட்டையாம்பரப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, ஆண்டாங்கோவில் செட்டிபாளையம் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் (26) எனபவர் கஸ்தூரி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரில் நேற்று தான்தோன்றி மலை போலீஸார் முத்துக்குமாரை கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதன்படி 12 மணி நிலவரப்படி மொத்தமாக 78.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. இதில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், காலை 11 மணி நிலவரப்படி 28. 88% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கரூர் தொகுதியில் மட்டும் 28.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர் ஈடுபட உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 824 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் 100 பேரும், துணை ராணுவத்தினர் 469 பேரும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் 446 பேரும் ஈடுபட உள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள <
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
குளித்தலை, வடவம்பாடி ஊராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர்(29), லாரி டிரைவர். இவரது தங்கை விண்மணி(22). கரூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல் காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.