Karur

News April 29, 2024

கரூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

கரூரில் நேற்று (ஏப்.28) 104.36 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

கரூர் அரசு அருங்காட்சியகம் சிறப்புகள்!

image

1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் தொல்லியல் அருங்காட்சியகம் கரூர் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. கரூர் பகுதியில் 1973,1977,1993 காலங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றது. அவ்வாய்வில் கிடைத்த ரோமானியர், சேரர், சோழர், பாண்டியர்களின் காசுகள், பல்லவர் காசுகள், பிற்கால பாண்டியர், ராசராசன், நாயக்கர் கால காசுகளை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். ஓலைச்சுவடிகள், செப்புத் தட்டுகள் போன்றவையும் உள்ளன.

News April 29, 2024

கரூர்: மீன் வியாபாரியை அடித்து கொலை மிரட்டல்

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் வீராசாமி (70). இவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று முன்தினம் இவரின் வீட்டின் கேட்டை சிலர் தட்டிக் கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து கேட்ட வீராச்சாமி, மனைவி பாப்பாத்தியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழரசன், மோகன் உள்ளிட்ட 5 பேர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News April 29, 2024

கரூர் நீதித்துறையில் வேலைவாய்ப்பு

image

கரூர் மாவட்ட நீதித்துறையில் 24 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த<> LINK <<>>மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

கரூர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே கோவில்பாளையம் பகுதியில் உள்ள அப்பகவுண்டர் தோட்டத்தில் 35 வயது உடைய ஆண் ஒருவர் நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த நன்னியூர் விஏஓ கவிதா நேரில் சென்று விசாரணை செய்து புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

கரூர் அருகே 4 பேர் கைது

image

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மன்மங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாங்கல் போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ரவிக்குமார், குமார், உதயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்துள்ளனர்.

News April 29, 2024

கரூர்: அதிகாரிகள் ஆய்வு

image

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும் , மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகில்களும் , சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் பரவி வீடுகளில் விழுந்து அவதிப்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தது தொடர்பாக அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

News April 29, 2024

காந்தி கிராமத்தில் கல்வீச்சு சம்பவம்

image

கரூர் காந்திகிராமம் ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை உதவி மேலாளர் வீட்டில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் பட்டப்பகலில், கல் வீசி தாக்குதல் நடத்தியதாக, புகாரில் பைனான்சியர் ரகுநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது ஐந்து பிரிவுகளில் பசுபதிபாளையம் போலீசார் ஏப்.28 ம் தேதி ஞாயிற்றுகிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2024

கள் விற்றவர் கைது, 7 லிட்டர் பறிமுதல்

image

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கருப்பூர் பகுதியில் தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள் விற்பனையில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் கரை கண்டார் குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (60). என்பவர் மீது வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 7 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

News April 28, 2024

கரூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

அரவக்குறிச்சி தாலுகா லிங்கத்துப்பாறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் தனது பைக்கில் மொச்சகொட்டபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் சுப்பிரமணி மற்றும் நாச்சிமுத்து ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சுப்பிரமணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கரூர் மாநகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!