India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெள்ளியணை பகுதியில் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனங்களில் வருவோரிடம் வழிப்பறி செய்வதாக புகார் வந்ததை அடுத்து பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் சங்கரலிங்கம் (28), தேவகோட்டை, தென்னரசு (23) ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.30,000 மதிப்புள்ள கைப்பேசிகள், ரூ.3000 மற்று இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
கரூர் மாவட்ட காவல்துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில் கரூர் ரயில் நிலைய பயணிகளுக்கு இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் லலிதா தலைமையிலான போலீஸார் ரயில் நிலைய பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர். மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண் – 1930 இந்த நம்பரில் பதிவு செய்யலாம்.
கரூரில் வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. நேற்று (மே.01), 44°C (111.2° F) எனப் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை வழக்கத்தை விட 7.2°C (44.96° F) அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று கரூர் மாவட்டத்திற்கு முதன் முதலாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கத்திலிருந்து கரூர் மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குறப்பாளையம் பிரிவு சாலையில் வேன் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுசீந்திரன், பழனிச்சாமி, விமலா, ஸ்ரீவித்யா ராமாயி புவனேஸ்வரி ஆக 7 பேரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். திருக்கடையூரில் உள்ள உறவினரின் 60-வது திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு காவேரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை குறைந்த காரணமாக நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. எனவே பொதுமக்கள் வருகின்ற பருவ மழை பொழிந்து ஆற்றில் போதுமான நீர் வரத்து வரும் வரை ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் காவிரி ஆற்றில் இருந்து வெளியே வரும் பாதையில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தார் . அப்போது ஒரு யூனிட் ஆற்று மணலுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துபோது அனுமதி இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது. தாசில்தார் அளித்த புகாரின் பேரில் ஒரு யூனிட் செம்மனுடன் லாரி பறிமுதல் செய்துள்ளனர். மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூரில் நேற்று (ஏப்.29) 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கரூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவருடன் மூன்று குடும்பத்தாரை அப்பகுதியினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதிக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக துன்புறுத்தி வந்துள்ளனர். இது குறித்து குளித்தலை டிஎஸ்பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.