Karur

News October 8, 2024

கரூரில் பேச்சுபோட்டி அறிவிப்பு

image

கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024 – ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு 17.10.2024 அன்று கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 04324 – 255077 ஐ தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

கரூர் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விபரங்கள்

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை: தக்காளி ரூ.50 வெங்காயம் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.45, இஞ்சி ரூ.160, கத்தரிக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.30, சுரக்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.15, பச்ச அவரை ரூ.120, பரங்கிக்காய் ரூ.20, மாங்காய் ரூ.80, புடலங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.15, கருவேப்பிலை ரூ.50, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

News October 7, 2024

கொங்குமண்டலம் செந்தில் பாலாஜி CONTROL?

image

ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு முன் கோவை, கரூர் அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பின் கோவைக்கு முத்துசாமி பொறுப்பு அமைச்சரானார். தற்போது செந்தில் பாலாஜி அமைச்சரான நிலையில், அவர் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலத்தை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 7, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 01.01.20-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.20 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.24 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெயர்களை பதிவு செய்ய நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 7, 2024

ஜாதி வன்கொடுமை: புகாரளிக்க தொலைபேசி எண்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கரூர் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள், தங்களது புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக, அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்ய, 18002021989 அல்லது, 14566 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

அரசு மருத்துவமனையில் புதிய டீன் பதவியேற்பு

image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் 23வது மருத்துவக் கல்லூரி 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, இயங்கி வருகிறது. கல்லூரிக்கு பத்தாவது முதல்வராக டாக்டர் வா.லோகநாயகி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 6, 2024

கரூரில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் செப்டெம்பர் மாதம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் இன்று முதல் 8ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 6, 2024

கிரிக்கெட் போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு

image

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க அனுமதியுடன், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் சீனியர் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நாகரத்தினம், மணிகண்ட பிரபு, மதன்குமார், ஷியாம் பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News October 5, 2024

கரூரில் உதவிதொகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் நேற்று தகவல் அளித்துள்ளார்.

News October 5, 2024

தவெக கரூர் மாவட்ட தலைவர் மறுப்பு செய்தி

image

குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கைது செய்யப்பட்ட ராஜாவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று தவெக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!