Karur

News May 8, 2024

குடிநீர் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்

image

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பணிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் காவிரி குடிநீர் வினியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவிரியில் இருந்து சேமிக்கப்படும் குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டி வரை ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உடன் இருந்தார்.

News May 8, 2024

கரூர் ஆட்சியர் அழைப்பு

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஆட்சியர், பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு ‘கல்லுாரி கனவு’ என்ற நிகழ்ச்சி மே 13ல் கரூர் -கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம் என்றார்.

News May 8, 2024

கரூர் வறட்சி மாவட்டமாக மாறியது

image

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றதால் வறட்சியின் கோர தாண்டவத்தால் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். காவிரி மற்றும் அமராவதி, நொய்யல், குடகனாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் கை கொடுக்காததால் இன்று கரூர் மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

News May 8, 2024

கரூர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

image

கரூர் காந்திகிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா மாணவ, மாணவிகள் ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஸ்.சௌமியா 500-க்கு 477 மதிப்பெண்களையும், கே.சௌமியா – 476, பி.ஹர்சிகா 470, தனிஷ்கா 469 மதிப்பெண்களும் பெற்றனர். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளியின் முதல்வர் கார்த்திகா லட்சுமி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்

News May 7, 2024

கரூர் கடம்பவனேசுவரர் கோயில் சிறப்பு

image

கரூர் குளித்தலையில் உள்ள 65 ஆவது தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் கடம்பவனேசுவரர் கோயில் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 2ஆவது தலமான இதில் மூலவராக கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை உள்ளனர். புராணகாலத்தில் இவ்விடத்திற்கு குழித்தண்டலை என்ற பெயரும் உண்டு. இங்கு கடம்ப வனம் அதிகமிருந்ததாகவும் கூறுகின்றனர். இங்குள்ள முருகனுக்கு அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

News May 7, 2024

தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

image

கடவூர் தாலுகா சின்னமநாயக்கன்பட்டி களம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (14). இவர் வாழ்வார்மங்கலம் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயப்பிரியா காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. ஜெயப்பிரியா தாயார் இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 7, 2024

கார் கதவில் பைக் மோதி படுகாயம்

image

கரூர் வெங்கமேடு அரசி நகர் அருகே திட்ட சாலையைச் சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் சின்னகுளத்து பாளையம் டீக்கடை அருகே காரை நிறுத்தி இருந்துள்ளார். அப்போது திடீரென காரின் கதவை தங்கராஜ் திறந்த போது அவ்வழியே பைக்கில் வந்த சிவபிரகாஷ் கதவில் மோதி படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

News May 7, 2024

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கரூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

2 பைக்குகள் மோதியதில் படுகாயம்

image

குளித்தலை திம்மாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (24). இவர் தனது பைக்கில் குறப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தோஷ் குமார் மனைவி மரகதவல்லி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 6, 2024

41 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

கரூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் 104 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9086 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 41 பள்ளிகள் 100% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதில் 08 அரசு பள்ளிகளும், 03 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும் என கரூர் மாவட்ட கல்வி நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.31% லிருந்து 95.90% ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!