Karur

News May 11, 2024

ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி

image

கரூர் ரயில்வே போலீசார் சார்பில் கரூர் ரயில் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் தடுப்பு, ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கரூர் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு துண்டறிக்கையை ரயில் பயணிகளுக்கு வழங்கினர்.

News May 11, 2024

கோடைகால பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

image

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமிகள் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எல்லா வகையான பயிற்சி, சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 11, 2024

பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 44 லட்சம்

image

கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் உண்டியல்கள் என்னும் பணி நேற்று திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பக்தர்களின் காணிக்கை யாக ரூ. 44 லட்சத்து 75 ஆயிரத்து 291 போடப்பட்டிருந்தது.
மேலும், தங்கம் 106 கிராம், வெள்ளி 655 கிராம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன என தெரிவித்தனர்

News May 10, 2024

கரூர் 16ஆம் இடம் !

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.58% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.69 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கரூர் மாவட்டம் 16ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

13 ஆவது இடம் பிடித்த கரூர்

image

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 11366 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 10638 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13 வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் மாநில அளவில் 20 ஆவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: கரூரில் 93.59 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 93.59 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.38 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.76 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

அரவக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளம் கலை பாடப்பிரிவுக்கான பிஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற 20ம் தேதி மாலை வரை இணையதளம் வாயிலாகவோ பதிவுசெய்யலாம் அல்லது கல்லூரியில் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விண்ணப்பங்களை பதிவுசெய்யலாம் என முதல்வர் வசந்தி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

மேம்பாலம் அடியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

கரூர் அமராவதி ஆற்றின் மேம்பாலம் அடியில் மூன்று நாட்களான 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற பசுபதி பாளையம் போலீசார் அடையாளம் தெரியாத உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும், இறப்பிற்கான காரணம் குறித்தும் பசுபதிபாளையம் போலீசார் நேற்றுமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!