India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 லேப்டாப், இண்டக்சன் ஸ்டவ், ஸ்பீக்கர், போன் உள்ளிட்ட ரூ.75865 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போனது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கரூர் மாவட்டம் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.48% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.48 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.37 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 88.80% பேரும், மாணவியர் 95.33% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
கரூர், ஆண்டான் கோவில் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின்(11), விஷ்ணு(12), மாரிமுத்து(11). நண்பர்களான மூவரும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இன்று(மே 14) நீச்சல் பழக சென்ற நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூவரையும் சடலமாக மீட்டனர். கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கும் நிலையில், 3 சிறுவர்களின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை கரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தூளிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லு மகள் தமிழரசி என்கிற மனிஷா (19). இவர் மணப்பாறை நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நல்லு பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
கரூர், புலியூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (54). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் வீரராக்கியம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் முத்தமிழ் செல்வன் படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கே.பேட்டை பகுதியில் பொது இடத்தில் நிலத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இருதரப்பிலும் சண்டை போட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சச்சரவு செய்த இரு தரப்பைச் சேர்ந்த பாரதி, சுமதி, ரஞ்சித், ரமேஷ், கீதா ஆகிய 5 பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலை ஊழியர் திருச்சி சேர்ந்த கருப்பண்ணன் (51) இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்று விட்டு மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டு பணிக்குச் செல்ல பைக்கை எடுத்தபோது கடும் வெயிலால் கருப்பண்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.