Karur

News October 18, 2025

கரூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 18, 2025

ரேஷன் கடைகள் தற்போது பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்

image

கரூரில் தற்போது வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. என்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் அறிவித்துள்ளார்.

News October 18, 2025

குளித்தலை அருகே டிராக்டர் மோதி பெண் பலி!

image

குளித்தலை அடுத்த குண்டன் பூசாரி கிராமத்தில்,நேற்று முன்தினம் சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கன்னியம்மாள், (30), பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த வள்ளி, (70), ஓந்தாய், (70), ஆகியோர் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உழவு பணி மேற்கொள்ள வந்த டிராக்டர் கன்னியம்மாள் உள்பட மூவர் மீதும் மோதியது. இதில் ஓந்தாயி உயிரிழந்தார். தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News October 18, 2025

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் கரூரில் விசாரணை

image

கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் விசாரணை நடத்த கரூர் வந்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ளனர். பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

News October 17, 2025

கரூர் : புதுமை தொழில் தொடங்க 10 லட்சம் மானியம்

image

கரூர் மாவட்டத்தில் Agri Start-up திட்டத்தின் கீழ் புதுமை தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் தொழிலை விரிவுபடுத்த விரும்புவோர் ரூ.10 முதல் ரூ.25 இலட்சம் வரை மானியமாக பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டு, தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

News October 17, 2025

கரூர்: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

கரூர் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை (அக்.18) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

அரவக்குறிச்சி: பைக்கில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா செம்பாறைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேலு (39). இவர் தனது பைக்கில் நேற்று செங்கல்பட்டி குறுக்கு சாலையில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி தமிழ்ச்செல்வி புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2025

கரூர்: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா வெண்ணமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (27). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று தனது பைக்கில் செம்மடை சாலையில் சென்ற போது எதிரே விஜயகுமார் ஓட்டி வந்த மேக்சிகேப் வேன் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து அவரின் தந்தை ராமசாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News October 17, 2025

கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் கவலைக்கிடம்!

image

கரூர் இரும்பூதிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே மாணிக்க சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாணிக்க சுந்தரம் வாகனத்தின் மீது பின்னால் மோதியதில், தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News October 17, 2025

கரூர்: அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

image

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!