Karur

News March 7, 2025

ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்பு; ஆட்சியர் அழைப்பு

image

கரூரில் தாட்கோ மூலம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர், மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

கரூரில் நாளை பெண்களுக்கான மாரத்தான் போட்டி

image

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி நாளை (மார்ச் 8) மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண் காவலர்கள் மற்றும் ஊா்க்காவல் படையினா் ஆகியோா்கள் கலந்துகொள்ளலாலம் முதல் 10 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்.

News March 6, 2025

கரூர் அரசியலில் பரபரப்பு

image

கரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாக பொறுப்பாளர்கள் பலர் திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ள தகவல் அரசியல் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர், நகர பொறுப்பாளர்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

News March 6, 2025

கரூர்: ஆங்கிலத் தேர்வு எழுதிய 10,000 பேர்

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. ஆங்கில தேர்வான இன்று கரூர் மாவட்ட முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 9,954 மாணவ, மாணவிகள், தனிதேர்வர்கள் 47 பேர் என 10,001 பேர் தேர்வு எழுதினர். பள்ளி கல்வித்துறை சார்பில் நிலையான மற்றும் பறக்கும் படையினர் 112 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News March 6, 2025

கரூர் மாவட்டத்தில் 10457 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினார்

image

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. கரூர் மாவட்டத்தில் 10526 மாணவ மாணவிகள் தனித் தேர்வுகள் 187 பேர் என தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 10347 மாணவ, மாணவிகள், தனிதேர்வர்கள் 110 பேர் தேர்வு எழுதினர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிலையான மற்றும் பறக்குபடை என 112 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

News March 6, 2025

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் ED சோதனை

image

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆதரவாளர்களான அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் சுப்பிரமணி வீடுகளில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்களுடன் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

News March 6, 2025

நாளை முதல்வர் உழவர்பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்டத்தில், நாளை (மார்ச் 7) முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில்  விவசாய கூலி வேலை செய்பவர்கள் மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அலுவலகங்களிலும் நாளை (7ம் தேதி) காலை 10மணி முதல் மாலை, 5 மணி வரை முகாமில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

News March 5, 2025

தாய், குழந்தைகள் மரணம்: கணவர் தற்கொலை

image

நாமக்கல் மாவட்டம் பதிநகரில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன பிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து, கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான அவரது கணவர் பிரேம்ராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 5, 2025

கரூரில் உதவித்தொகை பெற அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவிப்பின் படி முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கான மனு அளிக்கலாம். அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 07.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிவரை நடைபெறும். உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மாணவ மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரி சான்று ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.

News March 5, 2025

“நம்ம ஊரு, நம்ம ஸ்பெஷல்”

image

கரூரில் மிகவும் சுவையான தின்பண்டம் என்றால் அது வெள்ளியணை அதிரசம்தான் என்கிறார்கள். குறிப்பாக வெள்ளியணைக்கு சென்றால் கடைகளில் நாம் பார்க்கக்கூடியது அதிரசம்தான். அச்சு வெல்லம், காவிரி தண்ணீர் பயன்படுத்திச் செய்யப்படும் இந்த அதிரசத்திற்கென்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இதே போல் கரூரில் வேறு என்ன சிறப்பான உணவு உள்ளது என்று கமெண்ட் பண்ணுங்க மக்களே.

error: Content is protected !!