India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் செந்தில்நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?
கரூர் மக்களவை பொதுத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் பொது தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஏடிஎம் நிரப்ப சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரகுமார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், கடவூர் சீலமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியசாமி. இவர் கடவூரில் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரியசாமி நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கரூர் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வழக்குரைஞர் நாகராஜன் என்பவர் மட்டும் முதல்நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2-ம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
திமுக கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர். இதனால் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் குளப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது.இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். கடந்த தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குளித்தலை, பெரம்பலூர் தொகுதியாகும்.
கரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலி தலைமையில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் தொடர்பான செலவினங்களை எவ்வாறு கணக்கிடுவது, அதனைத் தொடர்ந்து, எப்படி கண்காணிப்பது அது தொடர்பான விபரங்களை எவ்வாறு சேகரிக்க, சேகரிக்கப்பட்ட விபரங்களையும், ஆவணங்களையும் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சீகம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம். இவர் வளையப்பட்டியில் உள்ள ஜீவா என்பவரின் வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற ஆறுமுகம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.