India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்த விதைகளை விதைப்பதற்காக சேமிக்கும் போது ஈரப்பதம் மற்றும் பூச்சித்தாக்குதல் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும். இடுபொருள் செலவினைக் குறைக்கவும், தங்களிடம் உள்ள விதைகளை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக்கட்டணமாக செலுத்தி கரூர் காந்திகிராமத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து பயன் அடையலாம் என கரூர் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன (BC, MBC, DNC) மாணவ, மாணவிகள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Fresh and Renewal applicatios) https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes இந்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

1.கரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய நபர் கைது
2.கரூரில் பல்வேறு பகுதிகளில் கொட்டிதீர்த்தது கனமழை
3.தான்தோன்றி மலையில் முடி காணிக்கை மண்டபம் திறப்பு கொடுக்கப்பட்டது.
4.கரூரில் நவ 24இல் மாரத்தான் போட்டி: துவக்கி வைக்கும் அமைச்சர்
5.கரூரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது.

குட்டக்கடை அருகே இன்று நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த காவலர் ஆண்டனி இளங்கோ மற்றும் தீனதயாளன் ஆகியோர் வாகனத்தணிக்கை செய்து போது TN 66 B 6212 (TATA Indigo) காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1,00,000/- மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் – 120 கிலோ, கூல் லீப் – 10 கிலோ மற்றும் விமல் பான்மசாலா – 17 கிலோ ஆக 147 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றியும் ஓட்டுநரை கைது செய்தனர் .

கரூர் மாவட்டத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (22.11.2024) ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் நவ.24ஆம் தேதி துவக்கி வைக்கவுள்ளார். மேலும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெரியவர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகர பகுதியில் நேற்று சுமார் 3 மணி நேரம் (24.80 மி.மீ) கன மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அங்கு குளிர்ந்த ஈரப்பதம் நிலவியது. தற்போது இந்த மழையினால் அப்பகுதியில் நல்ல குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நவ.15ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 9499055912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

➤குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை ➤தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ➤கரூர் மாவட்டத்தில் வெங்காய விலை உயர்வு ➤ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் ➤கரூர் மாவட்டத்தில் சாரல் மழை ➤கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் ➤வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் கர்நாடக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் அந்த மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. நேற்று உழவர் சந்தையில் 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது. 2ஆம் தரம் 70ரூபாயில் விற்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.