Karur

News November 16, 2024

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

image

கரூரில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

News November 16, 2024

கரூர் மாவட்டம் பல பகுதிகளில் மழை

image

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழையும். 

News November 16, 2024

கரூரில் மாவட்டத்தில் மழை

image

கரூர் மாவட்டம், காக்காவாடி, குள்ளம்பட்டி, கீழ் பசுபதிபாளையம் கிராமத்தில் இன்று(16.11.24) காலை 5 மணி முதல் லேசான சாரல் மழை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காற்றுடன் மழை செய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News November 15, 2024

கரூரில் வாக்காளர் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி செல்வோர் ஆகியோரின் வசதிக்காக கரூர் மாவட்டத்திலுள்ள 1055 வாக்குச்சாவடி மையங்களில் எதிர்வரும் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுகிழமை) ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளார்.

News November 15, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2. பசுபதிபாளையத்தில் பட்டப் பகலில் திருட்டு – திருடனுக்கு தர்ம அடி
3. கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் லாரிகள் மோதி விபத்து
4.கரூரில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அறிவிப்பு
5.அமராவதி தடுப்பணைக்கு 329 கன அடி நீர்வரத்து

News November 15, 2024

கரூரில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளர்/சுயதொழில் புரிபவர்/பொதுக்கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது பெற்றிட விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in”என்ற இணையதளத்தில் நவ.18ஆம் தேதி கடைசி நாளாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் அளித்துள்ளார்.

News November 15, 2024

கரூரில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அறிவிப்பு

image

கரூரில் புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

இணையதளம் மோசடி காவல்துறை எச்சரிக்கை

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் Whatsapp குரூப்பில் SBI rewardz என்னும் இணையதள மோசடி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த APKயை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மேலும் இதனை நம்பி உங்கள் வங்கி கணக்கு மற்றும் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கரூர் மாவட்ட எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 14, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
3.செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
4.ராஜேந்திரத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை விழா
5.கரூர் அமராவதி தடுப்பணைக்கு 187 கன அடி நீர்வரத்து
6.உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி

News November 14, 2024

எரிசக்தி யூனியன் மாநாடு கரூர் அமைச்சர் பங்கேற்பு

image

புதுடெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கு கொண்டு, மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால்லிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக மக்களுக்காக கரூர் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

error: Content is protected !!