Karur

News April 20, 2024

கரூர்; மொத்த வாக்குகள் நிலவரம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதன்படி 12 மணி நிலவரப்படி மொத்தமாக 78.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2024

கரூரில் 28.88% சதவீதம் வாக்கு பதிவு

image

கரூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. இதில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், காலை 11 மணி நிலவரப்படி 28. 88% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News April 19, 2024

கரூர் தொகுதி: 11 மணி நிலவரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கரூர் தொகுதியில் மட்டும் 28.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2024

கரூர் தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர்

image

கரூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் 1, 839 பேர் ஈடுபட உள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 824 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் 100 பேரும், துணை ராணுவத்தினர் 469 பேரும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் 446 பேரும் ஈடுபட உள்ளனர்.

News April 18, 2024

கரூர்: உங்கள் பெயர் இருக்கா? இல்லையா?

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள <>https://electoralsearch.eci.gov.in<<>> லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

News April 18, 2024

கரூர்: நேற்றைய வெப்ப நிலவரம்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 17, 2024

கரூர்: பெண் மாயம் – அண்ணன் புகார்

image

குளித்தலை, வடவம்பாடி ஊராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர்(29), லாரி டிரைவர். இவரது தங்கை விண்மணி(22). கரூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல் காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 17, 2024

கரூர்: 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

image

கரூர் மக்களவைத் தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு, இன்று முதல் 19 ஆம் தேதி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4, மகாவீர் ஜெயந்தியான ஏப்., 21, உழைப்பாளர் தினமான மே 1- ஆகிய ஆறு நாட்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

திரைப்பட இயக்குனர் வாக்கு சேகரிப்பு

image

கடவூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கை சின்னத்திற்கு நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், நாட்டைக் காப்பாற்ற I.N.D.I.A கூட்டணி வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். உடன் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் இருந்தனர்.

News April 15, 2024

தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகள் திருப்பாவை (16). வழக்கம் போல் இரவில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருப்பாவை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் திருப்பாவை தாயார் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!