Karur

News November 24, 2024

கரூரில் மாபெரும் மராத்தான்: செந்தில் பாலாஜி துவக்கிவைப்பு

image

கரூரில் இன்று 73 சங்கங்கள் இணைந்து மாபெரும் மராத்தான் 2030 போட்டியை நடத்தினர். இந்தப் போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று கொடியை அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News November 24, 2024

கரூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பிரச்சாரம்

image

கரூரில் பெண்களுக்கான பாலின வளமையங்களை கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் தோகைமலை வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் நாளைமுதல் (நவ.25) தொடங்கப்படவுள்ளது. மேலும் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஊராட்சி / வட்டாரம் / மாவட்ட அளவில் 25.11.2024 முதல் 23.12.2024 வரை நடத்தப்படவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 23, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
2.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களில் தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
4.குளித்தலையில் விவசாயிகள் 17 பேர் கைது
5.பள்ளி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி

News November 23, 2024

கரூர் கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில், குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சிகள் தினம் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளியணை பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றினார்.

News November 23, 2024

கரூர் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 23, 2024

கரூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News November 23, 2024

கரூர் மக்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

image

கரூரில் 2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 20.12.24 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 22, 2024

மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

கரூரில் கிராம சபை கூட்டம்-  கலெக்டர் அழைப்பு

image

கரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் வரும் 23.11.2024 அன்று காலை 7:00 மணி முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சிகளின் நடக்க இருக்கும் பொது பணிகள், சாலை வசதி திட்டம், உயர் கல்வி, மகளிர் சுய உதவி குழு கடன் தொகைகள் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!