Karur

News March 29, 2025

பெண்ணை கட்டையால் தாக்கிய நபர் கைது

image

கரூர் புரசம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா 27. இவருக்கும் மாடுவிழுந்தான்பாறையை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே கடந்த 2 மாதங்களாக லட்சுமிபிரியா, முருகானந்தத்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம், லட்சுமிப்பிரியாவை, காலால் உதைத்து, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.

News March 29, 2025

தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி?

image

கரூரில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக பரிசோதனை செய்தனர். எனவே பொதுமக்கள் தர்பூசணியை பார்த்து வாங்குவது நல்லது.

News March 29, 2025

கரூரில்  224 பேர் ஆப்சென்ட்

image

கரூர் மாவட்டத்தில் நேற்று 10ம் வகுப்பு பொது தேர்வு 59 மையங்களில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தனி தேர்வர்கள் என மொத்தம் 12,590 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று நடைபெற்ற தமிழ் பொது தேர்வில் 253 மாணவர் மாணவர்கள் மற்றும் 21 தனி தேர்வர்கள் என மொத்தம் 274 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News March 28, 2025

பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, சி.புதூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (20). இவர் தனது பைக்கில் ராஜரத்தினம் என்பவரை பின்னால் அமர வைத்து கொண்டு கடந்த 26 ஆம் தேதி புன்னம் சத்திரம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளவரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2025

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 

image

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, வி.செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது. இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்எண்ட் வகுப்புகள் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 81481 92175 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனே ஷேர் செய்யுங்கள். 

News March 28, 2025

விடுதியில் சேர ஏப்.6 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில், 2025ம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி வரும் ஏப்ரல் 8 ம் தேதி நடக்கிறது. இதில், சேர்வதற்காக, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 6 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 17 வயது நிரம்பிய பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

10ம் வகுப்பு தேர்வு: 12,590 மாணவ, மாணவியர் பங்கேற்பு

image

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்.) 15 வரை நடக்கிறது. இதில் 59 தேர்வு மையங்களில், 5,706 மாணவர், 5,781 மாணவியர், தனித்தேர்வர், 1,103 என மொத்தம், 12,590 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, 110 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

கரூர் மக்கள் வெளியே வர வேண்டாம்!

image

தமிழத்தில் கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ஆம் தேதிவரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 27, 2025

கரூர்: ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

image

அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்த ஊரான கரூரில் டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பாக அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என்று போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 27, 2025

கரூர் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை மாலை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் டி.ஆர்.ஓ தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கேஸ் சிலிண்டர்களில் முறைகேடு ஏஜென்சிகளையும் மெத்தனப்போக்கு உள்ளிட்ட புகார்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்தக் குறைதீர்க் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள், ஏஜென்சிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

error: Content is protected !!