India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ சிந்தலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் குளித்தலை கோர்ட் எதிரே உள்ள மெயின் ரோட்டில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மணிகண்டன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர், கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடியில் புகழ்பெற்ற யோக நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
கரூர், ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 65 மையங்களில், 18 ஆயிரத்து 30 போ் தேர்வு எழுத உள்ளனா். இந்த தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
ஜூலை 9ஆம் கரூருக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ழ்சி நிரல் ▶️காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம், ▶️11:30 மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல்▶️12:30 கரூர் பிரேம் மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை ▶️மாலை 5 மணி திருமாநிலையூர் பேருந்து திறப்பு மற்றும் நலத்திட்டம் ▶️மாலை 6 மணிக்கு ராயனூர் தளபதி திடலில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
கடவூர்: சிந்தாமணிப்பட்டி கீழப்பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் மகள் அல்மாஸ்பானு (03). இவர் நேற்று சிந்தாமணிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே முத்துராஜா என்பவர் ஒட்டி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சிறுமி உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அவரின் உடல் வைக்கப்பட்டது. இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!
கரூர்: தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த <
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டியை சேர்ந்த ரமேஷ், (42) அவரது மனைவி கல்பனா (31). இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் குஜிலியம்பாறை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோளப்பட்டி அருகே வந்த லாரி, பைக் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டநிலையில்சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்: கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் 2025–26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்காதவர்கள் மாணவர் சேவை மையத்தில் நேரில் வந்து சேர்க்கை பெறலாம். மேலும் வெளியூர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.
2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974694>>தொடர்ச்சி<<>>
Sorry, no posts matched your criteria.