Karur

News October 21, 2025

கரூர் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

கரூர் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின்<> ‘நம்ம சாலை’<<>> செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

கரூர்: டெலிகாம் நிறுவனத்தில் வேலை!

image

கரூரில் வேலை தடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Broadband technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 56 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்றால் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

கரூர் இளைஞர்களின் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் வாழும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை, மற்றும் பச்சை குத்துதல் இலவச பயிற்சிகள் தாட்கோ மூலம் 90 நாட்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கு இந்த இணைய தளத்தில் (www.tahdco.com) பதிவு செய்து பயன்பெறுமாறு
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

கரூர்: எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

image

கரூர்: பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் திலக்(25). இவருக்கும் லாலாபேட்டையைச் சேர்ந்த பிருந்தா(19) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

News October 20, 2025

கரூர்: உப்பிடமங்கலம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

கரூர்: உப்பிடமங்கலம் கோட்டம் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 24 ஆம் தேதி புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2025

கரூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

கரூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 20, 2025

கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் (31.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 20, 2025

கரூர்: மனைவியை அடித்த கணவன் மீது வழக்கு!

image

கரூர் மாவட்டம் மேல்நங்கவரம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (31), நேற்று தனது வாழைத் தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது அவரின் கணவர் பெரியசாமி யாரை பார்க்க சென்றாய் என கேட்டு அவரை தாக்கியுள்ளார். வயிற்றில் மிதித்து, தலைமுடியை பிடித்து தாக்கியதால், அனிதா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியசாமி மீது நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News October 20, 2025

கரூர்: ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்!

image

வேளாண், தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்கள் தொடங்க விரும்பும் முன்வருவோருக்கு, ரூ.10 முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் நிறுவனம் அல்லது ஸ்டார்ட்அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8220915157, 9942286337 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News October 20, 2025

கரூரில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

image

பிள்ளபாளையத்தைச் சேர்ந்த திலக் (25) மற்றும் லாலாபேட்டையைச் சேர்ந்த பிருந்தா (19) காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காரணமாக, பிருந்தாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். பாதுகாப்பிற்காக திலக், பிருந்தா இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அணுகி, கட்சி அலுவலகத்தில் திருமணம் நடந்தது. பின்னர் பாதுகாப்பு கேட்டு கரூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர்.

error: Content is protected !!