Karur

News March 14, 2025

’கரூர்’பெயர் வந்தது எப்படி?

image

’கரூர்’ என்கிற பெயர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்ய புராண காரணம் உண்டு. பிரம்ம பகவானின் கர்வத்தை அடக்க படைப்புத் தொழிலை காமதேனுவிடத்து சிவபெருமான் தந்ததாகவும். அந்த நிகழ்வு நடந்த இடத்தை ’கருவூர்’ அதாவது, ’கரு – வூர்’ உலகின் ’கரு’ உருவான ஊர். அப்படியான நிகழ்வு நடந்த இடமே பசுபதீஸ்வரர் கோவில் என்பது புராணக் கூற்று.

News March 14, 2025

கரூரில் புதிய தொழிற்பேட்டைகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், கரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் சிட்கோ புதிய தொழிற்பேட்டைகளை அமைக்கப்படும் என்றார். அதன்படி, 17,500 வேலைவாய்ப்பு உருவாகும்.

News March 14, 2025

கரூரில் எச்சில் இலையில் நேர்த்திக் கடனுக்கு தடை

image

நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் நேர்த்திக்கடன் செய்வதற்கு சென்ற ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் அனுமதி கொடுத்தார்.தீர்ப்பை ரத்து செய்ய கோரி கரூர் ஆட்சியர் தரப்பிலும்,கோயில் அர்ச்சகர் அரங்கநாதன் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் எச்சி எல்லையில் நேர்த்தி கடன் செய்வதற்கு தடை விதித்தனர்.

News March 13, 2025

வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்

image

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 15.03.2025 அன்று தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் 29.03.2025 சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29.3.25 சனிக்கிழமை தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும் மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

News March 13, 2025

ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் பெரியார் வளைவு மேம்பாலம் பகுதியில் இன்று மதியம் 12:30 மணி அளவில் ஆம்னி கார், மீது பின்புறம் வந்த மற்றொரு கார் வேகமாக மோதி அருகில் உள்ள தடுப்புச் சுவரில் உரசி சென்று நின்றது. இந்த விபத்தில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

கூட்டுறவு சங்கங்களின் குறைகளை தீர்வு கூட்டம்

image

கரூர் மண்டலத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைகளைத்தீர்க்கும் பணியாளர்நாள் கூட்டம் 14.03.2025 அன்று 3.00 மணியளவில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் முல்லை கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை

image

கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருளலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தமிழக அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

News March 13, 2025

கரூரில் இரு நாட்கள் பறவை கணக்கெடுப்பு பணி

image

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில், கடந்த வாரம் ஈரநிலம் கணக்கெடுப்பு முடிந்த நிலையில் வரும், 15, 16 தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவை கணக்கெடுப்பு பணி மீண்டும் நடக்கிறது. இதில் பறவை, உயிரியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்‌ மேலும் விபரங்களுக்கு, வனச்சரக அலுவலர்கள் முரளிதரன் எண், 91767 68768, கனகராஜ் எண், 97885 78344 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

News March 13, 2025

நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

கரூரில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம்.நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி (அ)அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு <>https://eservices.tn.gov.in/ <<>>இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

error: Content is protected !!