India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்: கடவூர் தாலுகா சேர்வைக்காரன்பட்டி அடுத்த களத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பழனியம்மாள் – மலைச்சாமி. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து போன மலைச்சாமி இன்று(ஏப்.1) வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்.3-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
கரூர், கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளியான நாராயண சாமி. இவரது 5 வயது மகளுக்கு தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் தங்கவேலிடம் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிதியுதவி அளிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீத்தப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு(17). இவர் கடந்த 27ம் தேதி கரூர் காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு, திருச்சி சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்ற போது சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. அதில் தலையில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
கடம்பவனேஸ்வரர் கோயில் – குளித்தலை. கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் – வெஞ்சமாங்கூடலூர். புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் – வேலாயுதம்பாளையம். கல்யாண வெங்கடரமணர் கோயில் – தான் தோன்றிமலை. மாரியம்மன் கோயில் – கரூர். பசுபதீஸ்வரர் கோயில் – கரூர். தாகுகாவனேஸ்வரர் கோயில் – திருப்பராய்த்துறை. சுந்தரேஸ்வரர் கோயில் – புகழிமலை. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. எனவே, வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.
ராமநாதபுரம் மாவட்டம் கீழ்மருதங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார் 24 என்பவர், கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, சஞ்சய்குமாரை கரூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளதால் நேற்று அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. நாள் விரக்தி அடைந்தவர் வீரியப்பட்டியில் உள்ள சகோதரி சிவரஞ்சனி வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.