India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துகதிரவன், இவரின் 7 வயது மகன் ஜெகதீஸ்வரன் நேற்று புதுகாணலி பஸ் ஸ்டாப் அருகே சாலையில் குறுக்கே நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்து கதிரவன் புகாரில் க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

கரூர்: நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கால்பகுதியில் ஆபரேஷன் செய்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று(அக்.20) மன விரக்தியில் இருந்த மாணிக்கம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (அ) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

கரூர் ஆண்டான் கோவில் கிழக்கு அமராவதி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(37). இவர் அழகு சாதன விற்பனை கடையில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று முன்தினம் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது விஷ பூச்சி முழங்காலில் கடித்ததில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று(அக்.20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ) இந்த <

கரூர் பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலை, க.பரமத்தி பகுதியில், முத்துக்கதிரவன் என்பவர் தனது மகன் ஜெகதீஸ்வரனுடன்(7) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியில் அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில், 7 வயது சிறுவன் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சதாம் அன்சாரி(36). இவர் கரூரில் உள்ள அம்பாள் நகரில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.20) அம்பாள் நகர் கணேஷ் என்பவரின் கட்டடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நெஞ்சு வலியால் கீழே விழுந்ததில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.