India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 21/03/2025 காலை11:00 மணிக்கு மாதாந்திர விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாகவும், நேரடியாக தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு கரூரில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை பல லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும், மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும்.
கரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற கோயில்கள். ▶️கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் (கரூர்) ▶️ஸ்ரீ கருவூர் மாரியம்மன் கோயில் (கரூர்) ▶️கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் (தாந்தோன்றிமலை) ▶️ புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (வேலாயுதம்பாளையம்) ▶️சதாசிவ பிரமேந்திரர் கோயில் (நெரூர்) ▶️கடம்பவணேஸ்வரர் கோயில் (குளித்தலை). இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயதான கூலி தொழிலாளி. இவர் தனது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்தாகவும், அதன் பின்னர் குழந்தையைத் தண்ணீர் தொட்டிக்குள் வீசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் போக்சோ வழக்கின் கீழ் தொழிலாளியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர், இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கு கரூர் உள்ளிட்ட 15 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில்<
கரூர் வையாபுரி நகரை சேர்ந்த புஷ்பாத்தாள் (65) 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் புஷ்பாத்தாள் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பாத்தாள் போலீசில் புகார் செய்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
கரூர் தாந்தோணி மலை வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் பூபதி (49). இவர் நேற்று தனது பைக்கில் கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த ஈச்சர் வேன் மோதியதில் பூபதி கீழே விழுந்து பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி தமிழ்ச்செல்வி புகாரின் பேரில் தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
கரூரில் IT, Customer Care, Data Entry, பல வேலைகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் போலி ஏஜெண்டுகளிடம் நம்பி ஏமாறாமல் உண்மை தன்மையை உறுதி செய்யவும். போலியான ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்று சைபர் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டு தெரியவந்தால் சைபர் க்ரைம் காவல் நிலையம் எண் 04324-299411 புகார் அளிக்கவும் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
’கரூர்’ என்கிற பெயர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்ய புராண காரணம் உண்டு. பிரம்ம பகவானின் கர்வத்தை அடக்க படைப்புத் தொழிலை காமதேனுவிடத்து சிவபெருமான் தந்ததாகவும். அந்த நிகழ்வு நடந்த இடத்தை ’கருவூர்’ அதாவது, ’கரு – வூர்’ உலகின் ’கரு’ உருவான ஊர். அப்படியான நிகழ்வு நடந்த இடமே பசுபதீஸ்வரர் கோவில் என்பது புராணக் கூற்று.
Sorry, no posts matched your criteria.