Karur

News October 23, 2025

க.பரமத்தி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் புஞ் சைகாளக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி (60). இவர், நேற்று முன்தினம் நொய்யல்- க.பரமத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். – அப்போது, கிரஷர் மேடு அருகில் எதிரே வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2025

கரூர்: கார் மோதி பைக்கில் சென்ற நபர் படுகாயம்

image

கரூர் மாவட்டம் கடவூர் அருகே கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தோகைமலை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அதே திசையில் பின்னால் விக்னேஷ் ஒட்டி வந்த கார் மோதியதில் ரமேஷ் படுகாயம் அடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 22, 2025

கரூர்:அரவக்குறிச்சி கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று ரூ.17 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட மக்களின் சார்பில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி நன்றியை தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

கரூர் எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு தீவிரம்

image

வடகிழக்கு பருவமழையால் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்களை பாதுகாக்க ஆயுதப்படை மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த குழுவின் தயார்நிலையை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா இன்று (22.10.2025) ஆயுதப்படை முகாமில் நேரில் பார்வையிட்டு, மீட்பு உபகரணங்களை பரிசோதித்து, தேவையான வழிமுறைகளை வழங்கினார்.

News October 22, 2025

கரூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000-ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 22, 2025

கரூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

image

கரூர்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE IT)

News October 22, 2025

கரூர்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

கரூர் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

JUST IN: கரூர் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

கரூர்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி!

image

கரூர்: தான்தோன்றிமலையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கவுசிக்குமார்(17). இவர், பசுபதிபாளையத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று(அக்.21) தான்தோன்றிமலையில் உள்ள, இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்று கோழியை சுத்தம் செய்ய, மெஷினை இயக்க சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 22, 2025

கரூர்: சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி!

image

கரூர்: புலியூர் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(48). இவர் அரசு பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.21) தனது பைக்கில் தாந்தோணிமலை மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!