Karur

News June 3, 2024

வாக்குகள் எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியானது தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

News June 3, 2024

திமுக அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா

image

கரூர் கௌரிபுரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

குளித்தலை: புகையிலை விற்ற 2 பேர் கைது!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகநோட்டக்காரன் பட்டி பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கார்ணாம்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம்(41), மணப்பாறையை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் 111.430 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News June 2, 2024

கரூர்: அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், கரூரில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News June 1, 2024

குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவு

image

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி டாக்டர். பிரபாகர் ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க சட்ட ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்கவும் உத்தரவிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பிறகு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். குளித்தலை டிஎஸ்பி, தோகைமலை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.

News June 1, 2024

கணவரை இழந்த இளம்பெண் விபரீதம்

image

புகழுர் நகராட்சியில் உள்ள காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி ரம்யா (27) இவரது கணவர் கதிர்வேல் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திடீரென காலமானார். இதில் விரக்தியில் மன உடைந்து காணப்பட்ட ரம்யா அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரம்யாவின் தாயார் வீரம்மாள் வேலாயுதம்பாளையம் போலிஸில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 31, 2024

கரூர் அருகே பெண் மீது தாக்குதல்

image

கரூர் மாவட்டம் தளவாபாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (57). இவருக்கும் அருகில் குடியிருக்கும் ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று ராஜேஸ்வரி அந்தப் பாதையில் நடந்து சென்றுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் அவரது மனைவி தாமரைச்செல்வி ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் திட்டி கைகளால் தாக்கியுள்ளனர்.

News May 31, 2024

கரூர்: இன்று மின்சாரம் இல்லை

image

புகழூர் துணை மின் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நாணப்பரப்பு, புகழூர் செம்படாபாளையம் , தோட்டக்குறிச்சி, வீரராஜபுரம் , தர்மராஜபுரம், செந்தூர் நகர்,   மூணூட்டுப்பாளையம் , மலையம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

News May 30, 2024

கரூர்: தடகள வீரர்களுக்கு வரவேற்பு

image

இலங்கையில் மே.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான உலக மாஸ்டர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த எம் வைரவேல் 400 ஒரு மீட்டர் அடில்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதே போல பொய்கைபுத்தூர் சேகர் என்பவர் போல்வால்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இன்று சித்தளவாய் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

News May 30, 2024

கரூர் மாயனூர் கதவணை சிறப்பு!

image

கரூரில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது மாயனூர் கதவணை. தவிட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் வழியாக மாயனூர் நோக்கி செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையின் நீரிலிருந்து கட்டளை, தென்கரை போன்ற வாய்க்கால்களில் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. இது 1,233 மீநீளத்திற்கு, 98 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட கதவணை, 2014 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

error: Content is protected !!