Karur

News February 7, 2025

கரூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகலில் விரைவு ரயில் அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் மோதி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கரூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.

News February 6, 2025

கரூர்: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும்.மேலும்,9655864426 என்ற எண்ணுக்கு What’s App பண்ணுங்க.

News February 6, 2025

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை..உடனே விரையுங்கள்!

image

பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக Relationship Manager பதவிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.09 ஆகும் .மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்க்-கை<<>> க்ளிக் செய்யவும்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2025

கரூர்: ரயில் சேவையில் மாற்றம்

image

கரூர் திருச்சி மார்க்கத்தில் வீரராக்கியம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (பிப்.7) ரயில்களின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை வந்து கரூரில் நின்று விடும். மயிலாடுதுறை சேலம் பயணிகள் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் கிளம்பி வீரராக்கியத்தில் நின்றுவிடும். சேலம் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மதியம் 3.40 கரூரில் இருந்து கிளம்பும்.

News February 6, 2025

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்

image

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (08.02.25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

News February 6, 2025

கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை

image

கரூர் மாவட்டம், ஏமூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அரவிந்த் (23) இவர் பசுபதிபாளையத்தில், தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும், 16 வயது சிறுமிக்கு, காதலிக்க சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, பள்ளி சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகார்படி, அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ், பசுபதிபாளையம் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 5, 2025

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (05.02.25 ) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, 34 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News February 5, 2025

கரூர்ல நாளை இங்கெல்லாம் கரண்ட் இருக்காதுங்க!

image

கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கே.வி.பி., நகர் மின் பாதையில் நாளை (ஜனவரி.6) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பெரியார் நகர், காந்திபுரம், வையாபுரி நகர் 2வது தெரு, KVB நகர், M.G.ரோடு, கணேசன் நகர் விஜயநகர் ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். தேவையான முன்னேற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் மக்களே!

News February 5, 2025

TMB வேலைவாய்ப்பு அப்ளை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Deputy Chief Financial Officer, Agricultural Officer, Global NRI Center Head பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்த<> லிங்க்<<>> க்ளிக் செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 5, 2025

பிப்.07 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.02.25 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாது விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை வாயிலாகவும் மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!