India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் நிலம் அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் நேற்று மீண்டும் அடைக்கப்பட்டார்.
கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி அறிவியல் குறித்து பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். இதில் அப்துல் கலாமின் சீடர் இளங்கோவன், ராஜகோபாலன் கலந்து கொண்டு அறிவியல் வளர்ச்சி குறித்து பேசினார்கள். மேலும் செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் அதை இயக்கும் முறை பற்றி சேர்மன் சுரேஷ் குமார் விளக்கினார். மேலும் இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து அபகரித்தாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் ஜுலை 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், வேளாண் இணை இயக்குநர் கலைச்செல்வி உள்ளிட்டோர் உள்ளனர். இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கரூர், பரமத்தி அருகே நேற்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் காற்றாலை வேண்டாம் என D.R.O இடம் மனு அளித்தனர். ஏற்கனவே அப்பகுதியில் கிரஷர்கள், கல்குவாரிகள், மற்றும் 100 கோழிப் பண்ணைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் காற்றாலை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்பதால் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்தனர்.
கரூரில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் சார்பாக 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு மாவட்ட அளவிலான வீரர், வீராங்கனைகள் தேர்வு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நாளை மாலை நடைபெற உள்ளதால் இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரூரில் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு நிதியுதவி பெற
சுயமாகவே பதிவு செய்து RCH IDபெற பதிவு செய்து கொள்ள முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய்மார்கள் தங்கள் கைப்பேசி அல்லது கணினி மூலம் (http://picme.tn.gov.in/picme ) என்ற இணையத்தில் சென்று சுயபதிவு என்ற கட்டத்தினை அழுத்தி ஆதார் அட்டை கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து RCH ID யை பெறலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, புகழ்பெற்ற அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.9.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரோப்கார் சேவையை நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக ரோப்கார் திடீர் பழுதாகி பாதியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடம்புரண்ட நான்கு பெட்டிகளையும் சரிசெய்யும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதன்மை மண்டல மேலாளர், மற்றும் முன்னோடி வங்கி மேலாளர், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர், பொது மேலாளர் , தொழில் மைய மாவட்ட தாட்கோ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து அபகரித்தாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.
Sorry, no posts matched your criteria.