India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரைச் சேர்ந்த தனது மனைவி ஆபாச படங்கள் பார்ப்பதால் விவாகரத்து கேட்ட கணவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றம், ‘ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் போது பெண்களுக்கு மட்டும் அதற்கு தனியுரிமை இல்லையா..?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது கணவனை துன்புறுத்து குற்றம் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் தாட்கோ & சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவு தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி பெற மாணவர்கள் மட்டும் www.tahdco.com தாட்கோ இணையதளத்தில் முகவரியில் பதிவு செய்ய வேண்டும். நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், தேர்வுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பெரியகருப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆகாத கூலித்தொழிலாளி நடராஜ் (40) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில் 48 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
கரூர் மருதூர் பேரூராட்சி உள்ள 15 வார்டுகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் வீடு தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. தற்போது முதல் கட்டமாக மருதுார் மற்றும் மேட்டு மருதுார் கிராமத்தில், ‘சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு, கரூரில் வரும் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov. என்ற இணையதளத்தில் மார்ச் 20க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் 9500277994 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு பதிவு செய்யலாமென கலெக்டர் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கரூர் மாவட்டத்தில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை, இருப்பினும் நோய் வராமல் தடுக்க உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
கரூரில் தாந்தோன்றி மலையில் கல்யான வெங்கட்ரமணா பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெற்கின் திருப்பதி என அழைக்கப்படுவது தனி சிறப்பாகும். இக்கோயிலில்
குழந்தை வரம் மற்றும் வாழ்வில் நலம் வேண்டி துலாம் பாரம் செலுத்தினால் வேண்டியது கைகூடும் என்பது ஐதீகம். மேலும், திருமணம் ஆகாதவர்கள் பெருமாளிடம் பிராத்தித்து, திருமணமான பிறகு திருக்கல்யாண உற்சவமும் நடத்துவார்கள்.
கரூரில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட மண்டலத்தில் 1, 2 பணிமனைகள் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, முசிறி என மொத்தம் 5 பணிமனைகளில் 127 நகரப் பேருந்துகளும், 131 புகா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சில்லறை தட்டுபாட்டை போக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை கரூா் நகர பேருந்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கரூரில், ‘செந்தில் பாலாஜி அறக்கட்டளை’ நடத்தும் TNPSC குரூப் 4 கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச். 30ஆம் தேதி முதல் தொடர்கின்றது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் வழங்கப்படும். தினசரி மற்றும் வார வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8148192175 என்ற எண்ணை அழைக்கவும். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.