Karur

News July 22, 2024

கரூரில் முதல்வர் திறப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர் மலை சுரும்பார் குழலி சமேத இரத்தினகிரிஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற புதன்கிழமை அன்று வடவூர்தி (ரோப் கார்) சேவையை, சென்னையில் இருந்து முதல்வர் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து, வடவூர்தியை பயன்படுத்தி சுரும்பார்குழலி அருள் பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

News July 22, 2024

கரூர் அருகே விபத்து: 3 பேர் உயிரிழப்பு

image

ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் குடும்பத்தினர் திருச்செந்தூர் சென்று விட்டு இன்று மீண்டும் வீடு திரும்பிய போது கரூர் அடுத்த ஆண்டிக்கோட்டை பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிருஷ்ணகுமார், அவரது மாமியார் இந்திராணி மற்றும் அவரது 10 வயது மகள் வருணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

News July 22, 2024

கரூரில் 20 பேர் ஆப்சென்ட்

image

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்வதற்கு நடத்தப்படும் போட்டி தேர்வானது நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத கரூர் மாவட்டத்தில் மொத்தம் 473பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்வினை 453பேர் மட்டுமே எழுதினர். மேலும் 20பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News July 21, 2024

கரூரில் 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்

image

கரூர் மாவட்டத்தில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் இணை மானிய தொகுப்பின் கீழ் (New to Business Loan Segment) என்ற கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திட்டத்தின் கீழ் ஊரகதொழில் முனைவோர்களுக்கு இணை மானிய நிதிதிட்டத்தில் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 8825572239, 8807878175.

News July 21, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம்; மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

கரூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெகதாபி மற்றும் மணவாடி பஞ்சாயத்து உட்பட்ட கோரிக்கைகளை சின்னப்பநாயக்கம்பட்டி எஸ்கேபி மஹாலில் 23.07.2024 நடைபெற இருப்பதால் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்ய வேண்டிய ஆவணங்களை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News July 21, 2024

மரவள்ளிக்கிழங்கு அதிரடி விலை உயர்வு

image

கரூர் மாவட்டத்தில் நொய்யல், பாளையம், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு விளைவிக்கப்படுகிறது. பின்னர் அது வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வியாபாரிகள் ஜவ்வரிசி தயாரிக்கு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு டன் ரூ.10 ஆயிரத்திற்கு விற்றது தற்போது ரூ.11 ஆயிரத்திற்கும், ரூ.12 ஆயிரத்திற்கு விற்றது தற்போது ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையானது.

News July 21, 2024

கலைஞர் கனவு இல்லம்: ஆட்சியர் ஆய்வு

image

கரூர் ஊராட்சி ஒன்றியம், பூலாம்பளையம், ஆத்தூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தங்கவேல் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் தேர்வான பயணிகள் கண்ணன் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் தலா 3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான தேர்வான இடத்தை ஆய்வு செய்தார்.

News July 21, 2024

கரூரில் கிடுகிடுவென உயர்வு

image

தமிழகம் முழுவதும் ஆடி வெள்ளியையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்றும் கோவில்களில் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால் நேற்று கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாழைத்தார்களின் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார் 450 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 370 ரூபாய் விற்பனையாகிறது.

News July 20, 2024

கரூர்: முன்னாள் அமைச்சர் மீதான காவல் நீட்டிப்பு

image

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான கொலை மிரட்டல் வழக்கில் நீதிமன்றம் அவரை வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.நில உரிமையாளரை மிரட்டிய வழக்கில் அவரது தம்பி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி 31-ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News July 20, 2024

பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

image

அமராவதி அணையின் நீர் மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் உயரம் 90 அடி. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!