India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் ஆனந்த். காய்கறிகளை இறக்கிவிட்டு கரூர் திருச்சி புறவழிச்சாலை அருகே சென்றுள்ளார். அவருடன் காய்கறி பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார். கரூர் மாவட்டம குளித்தலை அருகே டீ குடிக்க லாரி நிறுத்தினார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்து திடீரென்று லாரியில் ஏறி பெட்டியை உடைத்து காய்கறி வசூல் ரூ.42 லட்சத்தை எடுத்து சென்றனர்.
கரூர், காவேரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர் ஆகிய கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்களை தவுட்டுப்பாளையம் கிராம சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 150 பேருக்கு TNPL நிறுவனம் உணவு மற்றும் குடிநீர் வழங்கியது. பணிகளை TNPL மேலாளர் சிவக்குமார் பார்வையிட்டார்.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே கரூர் மாவட்டத்தில் உள்ள 330235 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், கரூர் சொந்தங்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
கரூர் மாயனுார் கதவணைக்கு, 1 லட்சத்து, 67 ஆயிரத்து, 156 கன அடி நீர் வந்தது. நேற்று நிலவரப்படி, வினாடிக்கு, 1 லட்சத்து, 10,000 கன அடியாக, நீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில், 1 லட்சத்து, 9,080 கன அடி நீரும், நான்கு பாசன வாய்க்காலில், 920 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர் வரத்து குறைந்ததால், கரூர் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் காவிரியாற்று பகுதிகளுக்கு வெள்ள அபாயம் நீங்கியது
இன்று ஆடி 18 ஐ முன்னிட்டு கரூரில் பூ மார்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600ல் இருந்து, 800 ரூபாய்க்கும், முல்லை பூ, 300 லிருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200லிருந்து, 250 க்கும், ரோஜா, 200 லிருந்து, 300 ரூபாய்க்கும், துளசி, 4 கட்டு 60 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து, ஒரு கட்டு 70 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினருக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் மாவட்ட செயலாளர் கே.என்.ஆர். சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில், சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் மாவட்ட உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கரூர்: ஆடி பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள் . அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இந்த கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புது வெள்ள நீரை தொழுது உழவுப் பணிகளை தொடங்குவார்கள். சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றி கணவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் தேதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.