Karur

News March 24, 2025

கரூரில் வேலை வாய்ப்பு இன்று கடைசி நாள்!

image

கரூரில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 16 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வரை வழங்கப்படும். விண்ணப்பிங்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 23, 2025

கரூரில் காணத்தக்க முக்கிய இடங்கள்

image

▶️அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் ▶️அருள்மிகு மாரியம்மன் கோயில்▶️அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில், தாந்தோணிமலை▶️வெண்ணெய்மலை முருகன் கோயில்▶️பொன்னணியாறு அணை▶️மாயனூர் கதவணை▶️ திருக்காம்புலியூர் அம்மா பூங்கா▶️அய்யர்மலை ▶️கரூரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள கரூர் அரசு அருங்காட்சியகம் . இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி ஒரு சின்ன ட்ரிப் பிளான் பண்ணுங்க.

News March 23, 2025

கரூர்: போக்குவரத்து கழகத்தில் 48 காலிப்பணியிடம்

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் கரூரில் மட்டும் 48 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இங்கு <>கிளிக்<<>> செய்து ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம்.

News March 23, 2025

கரூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

image

குளித்தலை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் டூவிலரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடலூர் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வேன் ஒன்று முருகானந்தம் புவனேஸ்வரி சென்ற டுவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம், உயிரிழந்தார். இந்த விபத்து குறித்தகுளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 22, 2025

காசிக்கு நிகரான குளித்தலை கடம்பர் கோயில்!

image

குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில் கோயில் அமைந்திருந்ததால், சிவபெருமான் கடம்பவனேஸ்வரர் என திருப்பெயர் ஏற்றார். சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு, மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இந்த கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. இங்கு, பெண்கள் தங்களது அனைத்து குறைகளும் நீங்க வேண்டிக்கொள்கிறார்கள்.

News March 22, 2025

கரூர் மாவட்டத்தில் 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரம் இருப்பு

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டணியில் நேற்று விவசாயிகளை குறைதீர்க்க கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் விவசாயிகளின் தேவைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

News March 22, 2025

கரூரில் ரூ.60,000 வரை சம்பளம் APPLY NOW

image

கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட 16 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். மார்ச்.24 கடைசி நாளாகும். விண்ணபிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 22, 2025

கரூரில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

image

கரூர், மண்மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37); இவர் கடந்த, 17ல் அப்பிப்பாளையத்தில் உள்ள, உறவினர் வீட்டிற்கு சென்ற போது மொட்டை மாடி தடுப்பு சுவற்றில் அமர்ந்து செல் போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் தந்தோணிமலை போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரணை.

News March 21, 2025

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.03.2025) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப., விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ப.சிவானந்தம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா ஆகியோர் உள்ளனர்.

News March 21, 2025

கரூரில் 45 மையங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு

image

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று வேதியியல், கணக்கியல், புவியியல் பாடப் பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. கரூர் மாவட்ட அளவில் 45 மையங்களில் 4,741 மாணவர்கள், 5,470 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என  மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!