India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தது. அப்போது, அலமாரியில் இருந்த 13 பவுன் தங்க நகை, ரூ.7 லட்சம் காணவில்லை. இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், திருடியது உறவினர்கள் பார்த்திபன், அவரது மனைவி சங்கரி என தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 19.10.24 காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டத்தின் சிறப்பு முகாம் நடக்க இருக்கின்றது. அத்தருணத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புது குடும்ப அட்டை கோருதல் போன்ற சம்பந்தமான மனுக்களை கொடுக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் 22,23 புகழுரிலும் 24,25, கோவ குளம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை 26,29 குளித்தலை அரசு மருத்துவமனையில் 05,06,07.11.24 ஆகிய மூன்று நாட்களும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு செய்தார்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயிலும் தினேஷ் என்ற மாணவன் காற்று உந்து விசையில் இயங்கும் Reusable Rocket Model செய்து, காற்று அழுத்தம் கொடுத்து இயக்கி காண்பித்தார். குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் நேரில் நேற்று பாராட்டி, வாழ்த்தினார். மேலும் இளம் விஞ்ஞானி இந்தியா 2024 விருது பெற்ற மாணவனை பாராட்டி சாதனை மலரை வழங்கினார்.
கரூரில் நாளை காலை 10.00 மணியளவில் கரூர், கோவை பைபாஸ் ரவுண்டானா அருகே உள்ள சிவ் முருகா ஹோட்டலில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், விதவைப் பெண்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
கரூரில் சீர்மரபினர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான முகாம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்ட அளவிலான அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர் 60% ,சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி திறன் அடிப்படையில் 40% என இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கூடுதல் விபரங்கள் பெற்றிட நேஷனல் (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (National Scholarship portal)லில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
கரூரில் தீபாவளி பண்டிகை அன்று மருத்துவமனை, கோயில்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.