Karur

News April 24, 2025

கரூரில் சமூக சேவையாற்றும் இளைஞர்களா நீங்க!

image

சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும். விண்னபிக்க <>இங்கே க்ளிக்<<>> செய்யவும் அல்லது 7401703493 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.

News April 24, 2025

கரூரில் வேலைவாய்ப்பு முகாம்…

image

கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த அனைவரும் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு விருது !

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

கருர்: பார்மசிஸ்ட் தேர்விற்கான இலவச பயிற்சி !

image

கரூரில் பார்மசிஸ்ட் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் இத்தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக விரைவில் துவக்கப்படவுள்ளது. இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 25.04.2025 தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 23, 2025

கரூர்: அரசு பேருந்தில் பிரச்னையா? உடனே கூப்பிடுங்க!

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!

News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

மனைவியிடம் பழகிய நபருக்கு அரிவாள் வெட்டு!

image

குளித்தலை அருகே பொய்யாமணி புலவர் புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (55) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவரின் மனைவி ரம்யாவுடன் கடந்த சில வருடங்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராவணன் செந்தில்குமாரை அரிவாளால் தலையில் வெட்டி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2025

கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!