Karur

News April 12, 2025

கரூரில் 10-வது படித்த பெண்களுக்கு அரசு வேலை!

image

கரூர் அங்கன்வாடியில் காலியாக உள்ள, 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <>https://karur.nic.in/ <<>>இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 12, 2025

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

image

கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் ஆகிய பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதேபோல், அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

News April 11, 2025

ஜிப்லி புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என எஸ்பி வேண்டுகோள்

image

சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதில் அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், டீப் ஃபேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் நேரிட அதிக வாய்ப்பு இருக்கிறது, இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என‌ மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்

News April 11, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

image

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 11, 2025

கரூரில் அரசு வேலை ! ; இதுவே கடைசி நாள் 

image

கரூரில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு, 21 முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களுக்கு <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 26க்குள் அனுப்ப வேண்டும். பயன்பெறுவோருக்கு ஷேர் பண்ணுங்க !

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

News April 11, 2025

பட்டப்பகலில் 19 வயது மாணவி கடத்தல்!

image

கரூர்: தாந்தோன்றிமலை பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி நேற்று(ஏப்.10) கல்லூரிக்குச் செல்லும் வழியிலேயே கடத்தப்படார். இதுகுறிது போலீசார் விசாரணையில் அவரைக் கடத்தியது அவரது காதலன் நந்தகோபாலின் குடும்பத்தினர் எனத் தெரியவந்தது. மாணவி வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தராததால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை மீட்டு விசாரிக்கின்றனர்.

News April 10, 2025

கரூருக்கு பெருமை சேர்த்த வீரர்

image

கரூர் மாவட்ட பாரா தடகள விளையாட்டு வீரர் ஜீவானந்தம் நடந்து முடிந்த பாரா தடகள  போட்டியிலும் மற்றும் பாரா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்  உயரிய ஊக்கத்தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கினார். கரூர் தடகளத்தில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

News April 10, 2025

கரூர்: மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவன்

image

புகழூரை அடுத்து தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த கொத்தனார் மணி (42) மனைவி தேனம்மாள் (40) இவா்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனா். இருவரும் வருகின்றனா். இதில் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மணி தகராறு செய்தாக வீட்டின் முன் கிடந்த கல்லை எடுத்து தேனம்மாள் தலையில் போட்டுள்ளார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்து நேற்று மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனா்

News April 10, 2025

கரூர்: விவசாயத்திற்கும், தொழிலுக்கும் இலவச கனிமம்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 28 நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மட்பாண்ட தொழிலுக்கும் தேவையான வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எவ்வித கட்டணமும் இன்றி வெட்டியெடுத்துச் செல்லலாம். இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் தங்களது அருகிலுள்ள இ-சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!