Karur

News December 6, 2025

கரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 6, 2025

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

image

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் ரயில் நிலையத்தில் நேற்று (டிசம்பர் 5) பாதுகாப்புப் படையினரும் இருப்புப்பாதை போலீசாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் காத்திருக்கும் அறைகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தின் பிற முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தினர்.

News December 6, 2025

கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.

News December 6, 2025

கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.

News December 6, 2025

கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.

News December 5, 2025

கரூர் காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

கரூர் மக்களே நாளை இங்க போங்க!

image

கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மனுஜ் ஷ்யாம் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” நாளை (டிசம்பர்-6) சனிக்கிழமை புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

News December 5, 2025

குளித்தலை அருகே சமையல் பாத்திரத்தில் விழுந்த சிறுமி பலி

image

குளித்தலை அருகே கொம்பாடிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் மகள் தமிழினி (03). இந்த சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டில் இருந்து தவறி சமையல் செய்து கொண்டிருந்த பாத்திரத்தில் விழுந்து உடல் முழுவதும் சுடுநீர் பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். மேலும் லாலாபேட்டை நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

தமிழக அளவில் மாஸ் காட்டிய கரூர்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற72 ஆவது தமிழ்நாடு கபடி மாநில சாம்பியன் போட்டியில் காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், சேலம், திருச்சி, சென்னை, அனைத்து அணிகளையும் வென்று முதல் இடத்தை கரூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்து பட்டத்தை 30 ஆண்டுகள் பிறகு வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு அணியின் வீரர்களுக்கு மாவட்ட கபடி குழு சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்தனர். உங்களது வாழ்த்துகளை கமெண்ட் பண்ணுங்க

News December 5, 2025

பாலவிடுதி டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா வீரனம்பட்டியை சேர்ந்த ராசு மகன் முருகன் (51). இவர் பாலவிடுதி டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற முருகன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!