Karur

News April 1, 2025

கரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்.3-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

TIDEL Park-ல் வேலை.. உடனே Apply பண்ணுங்க!

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 1, 2025

5 வயதாகியும் தலை நிற்காமல் தவிக்கும் குழந்தை!

image

கரூர், கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளியான நாராயண சாமி. இவரது 5 வயது மகளுக்கு தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் தங்கவேலிடம் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிதியுதவி அளிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 31, 2025

மரக்கிளை முறிந்து 11 வகுப்பு மாணவன் உயிரிழப்பு

image

சீத்தப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு(17). இவர் கடந்த 27ம் தேதி கரூர் காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு, திருச்சி சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்ற போது சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. அதில் தலையில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

கரூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

கரூரில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோயில்கள்!

image

கடம்பவனேஸ்வரர் கோயில் – குளித்தலை. கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் – வெஞ்சமாங்கூடலூர். புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் – வேலாயுதம்பாளையம். கல்யாண வெங்கடரமணர் கோயில் – தான் தோன்றிமலை. மாரியம்மன் கோயில் – கரூர். பசுபதீஸ்வரர் கோயில் – கரூர். தாகுகாவனேஸ்வரர் கோயில் – திருப்பராய்த்துறை. சுந்தரேஸ்வரர் கோயில் – புகழிமலை. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News March 30, 2025

கரூர் மக்கள் கவனத்திற்கு

image

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. எனவே, வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.

News March 30, 2025

கரூரில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்மருதங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார் 24 என்பவர், கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, சஞ்சய்குமாரை கரூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 30, 2025

மாயனூரில் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

image

கரூர் மாவட்டம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளதால் நேற்று அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. நாள் விரக்தி அடைந்தவர் வீரியப்பட்டியில் உள்ள சகோதரி சிவரஞ்சனி வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 29, 2025

பெண்ணை கட்டையால் தாக்கிய நபர் கைது

image

கரூர் புரசம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா 27. இவருக்கும் மாடுவிழுந்தான்பாறையை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே கடந்த 2 மாதங்களாக லட்சுமிபிரியா, முருகானந்தத்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம், லட்சுமிப்பிரியாவை, காலால் உதைத்து, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.

error: Content is protected !!