India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Classes Education in schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, பெற இணையதளத்தில் (National Scholarship portal) https://bcmbcmw.tn.gov.in/welfschemes.html என்ற லிங்கில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கடவூர் தாலுகா வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(40). இவர் பஞ்சப்பட்டி சாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்ற போது அவ்வழியே பூபதி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் குமார் தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி மற்றும் குருணிகுளத்துப்பட்டி கடைவீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிந்தாமணிபட்டி போலீசார், மாப்பிள்ளை மைதீன் (48), கமருதீன் (58), முஜிப் பெருமான் (50) ஆகியோர் மீது வழக்கு பதிந்து , இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் நவம்பர் 8 அன்று ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய கார்டு கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ) <
Sorry, no posts matched your criteria.