Kanyakumari

News August 10, 2025

குமரி மக்களே.. செல்போன் தொலைந்துவிட்டதா? DON’T WORRY

image

நீங்கள் உங்க செல்போனை தொலைத்துவிட்டால் இனி கவலையே வேண்டாம். உடனே அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது https://eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யலாம். மேலும், CEIR Portal: https://www.ceir.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து உங்க செல்போனை நீங்களே பிளாக் செய்து கொள்ளலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 10, 2025

குமரி: போலீசாரை இடமாற்றம் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

image

கன்னியாகுமரியில் சொந்த ஊரில் பணியாற்றும்போலீசாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அசோக்குமார் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  நேற்று(ஆக.9) மனுவை விசாரித்த நீதிபதிகள்,”இடமாற்றம் செய்வது, பணியமர்த்துவது காவல்துறையின் நிர்வாக ரீதியானது, இதில் கோர்ட் அதிகாரத்தை பயன்படுத்தி பணியாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவுபிறப்பிக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

News August 10, 2025

குமரி: திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்..! COMING SOON

image

குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புது முயற்சியாக, ரோப் கார் திட்டம் வரவிருக்குது. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் & தமிழக அரசு இணைந்து செயல்படுத்த உள்ள இந்த ரோப் கார், காமராஜர் மண்டபத்தின் பின் பகுதியிலிருந்து திருவள்ளுவர் சிலை வரை சுமார் 800மீ நீளத்திலும், கடல் மட்டத்திலிருந்து 50மீ உயரத்திலும் அமைய இருக்குது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின் 2027ல் இயக்கப்படும் என தகவல். #SHARE

News August 9, 2025

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் புதிய கருவி

image

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பிரிவிற்கு ரத்தம் பிரித்தெடுக்கும் புதிய கருவி ரூ.75 லட்சம் செலவில் வந்துள்ளது. இந்த கருவினை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பார்வையிட்டு அதனை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ டேவிட் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

News August 9, 2025

குமரி: காவல் அதிகாரிகள் பதவி உயர்வு

image

குமரி மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்று இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் எஸ்.பி.சி.ஐ.டி பரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் பதவி உயர்வு பெற்று தென் மண்டலத்திற்கு விரைவில் பணி மாற்றம் செய்யப்படுகிறார். இதேபோல குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் மேற்கு மண்டலத்திற்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

News August 9, 2025

குமரி: எல்லாம் நிறைவேறும் தாணுமாலய சுவாமி கோயில்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே அருள்பாலிப்பதால் இங்கு எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி இங்கு நிறைய பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இது தேவேந்திரன் சாபம் நீங்கிய தலம் என்றும் நம்பப்படுகிறது.

News August 9, 2025

குமரியில் 633809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்கள் குடற்புழு நீக்க மாத்திரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஒன்று முதல் 19 வயதுடைய 558766 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 75043 பெண்கள் என மொத்தம் 633809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். 2893 பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

News August 9, 2025

குமரியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

image

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04652-235451 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 9, 2025

குமரி: பூம்புகார் படகு சேவை START..!

image

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து 24 மணி நேரமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரை பயணம் மேற்கொள்ளலாம். SHARE IT..!

News August 9, 2025

தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!